ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது |
தமிழ் சின்னத்திரை வரலாற்றில் தொடர்ந்து ஒளிபரப்பாகி சாதனை படைத்து வருகிறது சரவணன் மீனாட்சி தொடர். இந்த தொடரின் நாயகன், நாயகிகள் நிறைய மாறிவிட்டார்கள். ஆனால் தொடர்ந்து தொடர் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
சமீபத்தில் ஆயிரம் எபிசோட்களை கடந்தது சரவணன் மீனாட்சி. ஆனால் காதல் கதையாக தொடங்கி தொடர்ந்து ஒளிபரப்பாகி வந்த தொடர், இப்போது காலத்துக்கு ஏற்றமாதிரி தன்னையும் மாற்றிக் கொண்டு திகில் தொடராக மாறியிருக்கிறது.
கதைப்படி, சரவணன் குடும்பம் ஓட்டல் நடத்த விரும்புகிறது. இதற்காக ஒரு வீடு பிடித்து அதையே ஓட்டலாக மாற்றுகிறார்கள். அந்த வீட்டுக்குள் பேய் இருக்கிறது. அது மீனாட்சிக்குள் புகுந்து கொள்கிறது. இதனால் கோவிலுக்கு ஆர்வமா செல்லும் மீனாட்சி, இப்போது கோவில் என்றால் தவிர்த்து விடுகிறார். அந்த வீட்டுக்குள் இருக்கும் பேய் யார். அந்த பேய் ஏன் மீனாட்சிக்குள் வர வேண்டும். அடுத்து அது என்ன செய்யப்போகிறது என்பது அடுத்தடுத்த எபிசோட்களில் பரபரப்பு கிளப்ப இருக்கிறது.