ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஹிந்தி சேனல்களில் பெரும் வரவேற்பை பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் நாளை(ஜூன் 25ம் தேதி) முதல் ஒளிபரப்பாகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 8.30 மணிக்கும், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. 14 செலிபிரிட்டிகள் ஒரே வீட்டில் வெளியுலக தொடர்பு இல்லாமல் வசிக்க வேண்டும் என்பதுதான் இந்த நிகழ்ச்சின் சாராம்சம். கலந்து கொள்ளப் போகும் 14 பேர் யார் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை.
இந்த நிகழ்ச்சிக்காக பூந்தமல்லியை அடுத்த தண்டலத்தில் பிரமாண்ட வீடு ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டுக்குள் 53 கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. அந்த கேமராக்கள் பங்கேற்பாளர்களை கண்காணிக்கும். 2 கழிவறைகள் 2 குழியலறைகள் உள்ளது. இதைத்தான் 14 பேரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 5 பேர் மட்டுமே குளிக்க வசதியுள்ள ஒரு நீச்சல் குளமும் இருக்கிறது. கடிகாரம், செல்போன், இண்டெர் நெட், ரேடியோ, தொலைக்காட்சி எதுவும் இருக்காது ஒரே ஒரு மைக்ரோ போன் இருக்கும். அது பங்கேற்பாளர்கள் நிகழ்ச்சி அமைப்பாளருடன் தொடர்புகொள்ள மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். தங்களுக்கு தேவையான உணவை தாங்களே தான் தயாரித்துக் கொள்ள வேண்டும்.
இந்த வீட்டை நேற்று பத்திரிகையாளர்களுக்கு சுற்றிக் காட்டினார்கள். நிகழ்ச்சி எப்படி படமாக்கப்படுகிறது என்பதை விஜய் டி.வி அதிகாரிகள் விளக்கினார்கள்.