ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சின்னத்திரை, பெரியதிரை இரண்டிலும் காமெடியில் கலக்கிக் கொண்டிருக்கிறார் தேவதர்ஷினி. இன்றைய தேதியில் மனோரமா, கோவை சரளாவிற்கு பிறகு காமெடியின் அடையாளம் தேவதர்ஷினிதான். காஞ்சனாவில் தொடங்கிய இவரது காமெடி பயணம் பெரிய திரையில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சின்னத்திரையில் மர்ததேசம் தொடர் மூலம் தனது கேரியரை ஆரம்பித்தார். அதில் உடன் நடித்த சேத்தனை காதலித்த்து திருமணம் செய்து கொண்டார். தற்போது சண்டே கலாட்டா என்ற காமெடி நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். சினிமாவிலும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
தோளுக்கு மேல் மகள் வளர்ந்து விட்ட நிலையிலும் இப்போதும் அவர் படித்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் முக்கிமானது. காஞ்சனா படத்தில் நடித்து முடித்த பிறகு சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் எம்எஸ்சி அப்ளைடு சைக்காலஜி படித்து முடித்தார். இப்போது டிப்ளமோ இன் கைடன்ஸ் அண்டு கவுன்சிலிங் கோர்ஸ் படித்துக் கொண்டிருக்கிறார். இவைகள் உளவியில் படிப்புகள்.
"படித்து முடித்ததும் கவுன்சிலிங் செண்டர் அமைப்பேனா என்று தெரியாது. ஆனால் எனக்கு தெரிந்தவர்களுக்கு, என்னை தேடி வருகிறர்களுக்கு மனரீதியான பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன்" என்கிறார் திவ்யதர்ஷினி. திவ்யதர்ஷினியின் தாயும், தந்தையும் கல்லூரி முதல்வர்களாக பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.