ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஜெயா, ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக இருப்பவர் இளவேனில். தற்போது எம்ஜிஆர் -100 என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் அவர், இந்த நிகழ்ச்சிக்கு நேயர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக சொல்கிறார். தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...
ஜெயா டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த நான், தற்போது ஜெயா மேக்ஸ் டிவியில் எம்ஜிஆர் 100 என்ற நிகழ்ச்சியை ஜெயா மேக்ஸ் டிவியில் தொகுத்து வழங்கி வருகிறேன். ஒவ்வொரு நாளும் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை ஒளிபரப்பாகி வருகிறது. எம்ஜிஆரின் அரசியல், சினிமா மற்றும் சாதனைகளை சொல்லும் நிகழ்ச்சி இது. இடையிடையே அவர் நடித்த படங்களின் பாடல், காட்சிகள் இடம்பெறும். எம்ஜிஆருக்கென்று பெரிய ரசிகர் வட்டம் இருப்பதால் இந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
இப்போது புத்தகத்தில் உள்ள எம்ஜிஆரின் சாதனைகளை சொல்லி வரும் இந்த நிகழ்ச்சி அடுத்து ஸ்டுடியோவிற்கு வெளியேயும் செல்லவிருக்கிறது. எம்ஜிஆரின் நினைவு இல்லம் சென்று அவர் உபயோகப்படுத்திய பொருட்களை மக்களுக்கு காண்பிக்க இருக்கிறோம். அதையடுத்து, எம்ஜிஆருடன் பணியாற்றிய சினிமாக கலைஞர்கள், அரசியல் தலைவர்களிடமும் அவரைப்பற்றிய சுவராஸ்யமான விசயங்களை கேட்டு வெளியிடவும் ஆலோசனை நடக்கிறது.
முக்கியமாக, எம்ஜிஆர் - ஜெயலலிதா இருவரும் இணைந்து 28 படங்களில் நடித்துள்ளனர். அதனால் அவர்கள் சம்பந்தப்பட்ட படக்காட்சிகளே அதிகமாக இந்த நிகழ்ச்சியில் இடம்பெறுகிறது. அதோடு சரோஜாதேவி போன்ற நடிகைகளுடன் அவர் நடித்த படக்காட்சிகளும் இடம்பெறுகிறது. எனக்கு ரோல் மாடலே எம்ஜிஆர், ஜெயலலிதாதான். அதனால் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதை எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன்.
மேலும், இந்த நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்குவதைப் பார்த்து பொதிகை டிவியிலும் அழைத்தனர். செவ்வாய்க்கிழமை மதியம் 12 முதல் 1.30 மணி வரை ஆடியன்சுடன் பேசும் நேரடி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறேன். பல்வேறு துறைகளில் சாதித்தவர்களை அழைத்து பேட்டி எடுப்பது. அதன்பிறகு குரூப் நடனம், பாடல் என ஐந்து பகுதிகளாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது என்கிறார் தொகுப்பாளர் ச.இளவேனில்.