ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இந்தியில் 2011முதல் 2016 வரை ஒளிபரப்பான மெகா சீரியல் தியா ஆர் பாத்தி ஹம். ரோகித் ராஜ் கோயல் என்பவர் இந்த தொடரை இயக்கினார். இதில் நாயகியாக நடித்தவர் தீபிகா சிங். இந்த தொடரில் பணியாற்றி வந்தபோது இயக்குனர் ரோகித் ராஜ் கோயலுக்கும், தீபிகா சிங்கிற்குமிடையே காதல் மலர்ந்ததை அடுத்து 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு சீரியல் நிறைவு பெற்றதை அடுத்து கர்ப்பமான தீபிகா சிங்கிற்கு, மே 20-ந்தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை ரோகித் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தாயும், குழந்தையும் நலமாக இருக்கிறார்கள். எங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை என்று கூறியுள்ளார்.
இந்தியில் ஏராளமான ரசிகர் ரசிகைகளை கொண்டுள்ள தீபிகா சிங், அடுத்து மீண்டும் நடிக்க வருவாரா? இல்லை முழுநேர குடும்பத்தலைவியாகி விடுவாரா? என்கிற கேள்விகள் பாலிவுட்டில் எழுந்திருக்கிறது.
மேலும், இந்தியில் தீபிகா சிங் நடித்த தியா ஆர் பாத்தி ஹம் என்ற அந்த தொடர் பின்னர் தமிழில், என் கணவன் என் தோழன் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு விஜய் டிவியில் ஒளிபரப்பானது.