14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
குஷ்பு தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் தொடர் நந்தினி. இந்த தொடரில் மலையாள நடிகை மாளவிகா வேல்ஸ் நாயகியாக நடித்து வருகிறார். தமிழ், கன்னடத்தில் நேரடியாக தயாராகும் இந்த சீரியல் தெலுங்கு, மலையாளத்தில் டப் செயப்பட்டு வருகிறது. மேலும், இந்த நந்தினி சீரியல் தவிர அம்முவின்டே அம்மா என்ற மலையாள சீரியலிலும் தற்போது லீடு ரோலில் நடித்துக்கொண்டிருக்கிறார் மாளவிகா வேல்ஸ்.
மேலும், மலையாளத்தில் தான் நடித்துள்ள சீரியல்களில் இதுவரை தனக்குத்தானே டப்பிங் பேசியுள்ளாராம் மாளவிகா. ஆனால் இந்த நந்தினி சீரியல் மலையாளத்தில் டப் செய்யப்பட்டு வெளியாகும் நிலையில், அவருக்கு இன்னொருவர்தான் டப்பிங் பேசுகிறாராம். மாதத்தில் 20 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடை பெறுவதால் அவருக்கு டப்பிங் பேச போதிய நேரம் கிடைப்பதில்லையாம்.
அது மட்டுமின்றி நந்தினி சீரியலில் நடிப்பதால் அவர் மலையாளத்தில் தற்போது நடித்து வரும் அம்முவின்டே அம்மா சீரியலுக்கும் டப்பிங் பேச அவருக்கு போதிய நேரம் கிடைக்கவில்லையாம். இதனால் தாய்மொழியான மலையாளத்தில் வெளியாகும் நேரடி தொடரிலும் தனக்கு வேறு நபர் டப்பிங் கொடுத்திருப்பதால் மனதளவில் வருத்தத்தில் உள்ளாராம் மாளவிகா வேல்ஸ்.