பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியான பிரேமலு படம் மூலமாக கேரளா மட்டுமல்லாது தமிழகம் மற்றும் ஆந்திரா என தென்னிந்திய அளவில் மிகவும் புகழ் பெற்ற நடிகையாக மாறியவர் மமிதா பைஜூ. குறிப்பாக இளைஞர்களின் பேவரைட் நடிகையாக மாறிவிட்டார். தமிழில் ஜிவி பிரகாஷ் நடித்த ‛ரெபல்' படத்திலும் நடித்தார். இவர் இன்று கேரளாவில் இரண்டாம் கட்டமாக நடக்கும் பார்லிமென்ட் தேர்தலில் ஓட்டளிக்க முடியாத சூழலுக்கு ஆளாகியுள்ளார்.
ஆம்... இவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. மகள் சினிமாவில் பிஸியாகி விட்டதால் அவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என சரி பார்ப்பதற்கு நேரம் கிடைக்காமல் போய்விட்டது என அவரது தந்தை டாக்டர் பைஜு கூறியுள்ளார்.
இதில் என்ன ஆச்சரியம் என்றால் நாடு முழுவதும் இருக்கும் மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு ஓட்டளிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் யூத் ஐகானாக கேரளாவில் தேர்வு செய்யப்பட்டவர் மமிதா பைஜூ. அப்படிப்பட்டவரின் பெயரே வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டுப் போய் இருப்பதை என்னவென்று சொல்வது?