தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

ஒரு காலத்தில் தனது துறையில் உச்சத்தில் இருந்து விட்டு கடைசி காலத்தில் கஷ்டத்தில் வாழ்ந்தவர்கள் சினிமாவில் அதிகம். தியாகராஜ பாகவதர் தங்க தட்டில் சாப்பிட்டு விட்டு, மாம்பலம் ரயில் நிலையத்தில் பசியால் படுத்துக் கிடந்தார். சாவித்ரி சொகுசு காரில் பயணம் செய்து விட்டு கடைசி காலத்தில் கை ரிக்ஷாவில் பயணித்தார். இப்படி நிறைய இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் இசை அமைப்பாளர் ஆர்.சுதர்சனம்.
சினிமா இசை வாய்ப்பு தேடி சென்னை வந்த சுதர்சனம் மிகுந்த போராட்டத்திற்கு பிறகு ஏவிஎம் நிறவனத்தில் மாதச் சம்பளத்திற்கு பணியாற்றும் இசை அமைப்பாளர் ஆனார். 'சகுந்தலை' படத்தில் தொடங்கிய இவர் பயணம், நாம் இருவர், வேதாள உலகம், வாழ்க்கை, ஓர் இரவு பராசக்தி, களத்தூர் கண்ணம்மா, தெய்வபிறவி, நானும் ஒரு பெண், பூம்புகார் என தொடர்ந்தது.
தமிழ்த் திரை உலகின் ஜாம்பவான்களாக வளர்ந்த பலருக்கு இவர்தான் அறிமுக இசை அமைப்பாளர். பராசக்தி சிவாஜியில் தொடங்கி, களத்தூர் கண்ணம்மா கமல்ஹாசன், வாழ்க்கை வைஜெயந்தி மாலா, கன்னட நடிகர் ராஜ்குமார் இப்படி பலரின் முதல் பட இசை அமைப்பாளர் இவர். டி எம் சவுந்தரராஜன் உள்ளிட்டோரை பாடகர்களாக அறிமுகப்படுத்தியவர்.
புதியவர்களின் வருகை, புதிய இசை கருவிகளின் வருகையால் வாய்ப்பு இழந்த சுதர்சனம் தனது கடைசி காலத்தில் மாணவர்களுக்கு இசை கற்றுக் கொடுத்து அந்த வருமானத்தில் வாழ்ந்து மறைந்தார். அவரது 110வது பிறந்த நாள் இன்று.




