நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

'பாகுபலி 2, ஆர்ஆர்ஆர்' என இரண்டு 1000 கோடிக்கும் அதிகமான படங்களைக் கொடுத்தவர் தெலுங்கு இயக்குனர் ராஜமவுலி. தற்போது 'வாரணாசி' படத்தை இயக்கி வருகிறார். மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை அடுத்த வருடம் 2027, ஏப்ரல் 7ம் தேதி வெளியிட உள்ளார்கள்.
இந்த வெளியீட்டுத் தேதி பற்றிய அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதனால், இப்படம் பற்றிய மேலும் சில தகவல்கள் டோலிவுட் வட்டாரங்களில் கசிந்துள்ளது. இப்படத்தை இயக்குவதற்காக ராஜமவுலிக்கு சம்பளமாக வெளிநாட்டு உரிமை தரப்பட்டுள்ளதாம்.
'பாகுபலி 2, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்கள் வெளிநாடுகளில், குறிப்பாக ஹாலிவுட்டில் பெரும் கவனத்தை ஈர்த்தது. மேலும், 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கர் விருதும் கிடைத்தது. அதனால், ராஜமவுலியை ஹாலிவுட் இயக்குனர்கள் பலரும் பாராட்டினார்கள்.
தனது படங்களுக்கு உலக அளவில் வரவேற்பு இருப்பதால் ஹாலிவுட் உரிமை என்ன விலைக்கு விற்கப்படுகிறதோ அதை சம்பளமாகப் பெற்றுக் கொள்கிறேன் என ராஜமவுலி கூறியதாகத் தகவல். தற்போதே அந்தப் படத்தின் வெளிநாட்டு உரிமையை 100 கோடிக்கும் அதிகமாகக் கேட்கிறார்களாம். ஆனால், படப்பிடிப்பு முடிந்த பின்புதான் அது பற்றிய வியாபாரத்தை பேசப் போகிறார்களாம். எப்படியும் 150 கோடிக்கு அதிகமாக விலை போகும் என்கிறார்கள். அப்படி ஒன்று நடந்தால் இந்தியாவில் அதிக சம்பளம் பெறப் போகும் இயக்குனர் என்ற பெருமையை ராஜமவுலி பெறுவார்.