வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படத்தைத் தயாரித்த கன்னட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு 'டாக்சிக்'. கீது மோகன்தாஸ் இயக்கத்தில், யஷ், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் இந்தப் படம் மார்ச் 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
இப்படத்தின் ஆந்திரா, தெலுங்கானா மாநில வினியோக உரிமை 120 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக இப்படத்தின் சார்பாக செய்தி அனுப்பப்பட்டிருந்தது. அது தெலுங்குத் திரையுலகினருக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள்.
யஷ் நடித்து வெளிவந்த 'கேஜிஎப் 2' படம் 1000 கோடிக்கு மேல் வசூலித்த ஒரு படம். தெலுங்கு மாநிலங்களில் அந்தப் படம் மொத்தமாக 130 கோடி வசூலித்ததாம். படத்தின் வியாபாரம் சுமார் 75 கோடிக்கு மேல் நடந்து நிகர வசூலாக 80 கோடிக்கும் சற்றே கூடுதலான தொகை தான் கிடைத்ததாம். படம் தந்த மொத்த லாபமே 5 கோடிக்கு சற்றே கூடுதல்தான் என்கிறார்கள்.
அப்படியிருக்கும் போது படத்தின் வியாபாரம் மட்டுமே 120 கோடிக்கு நடந்துள்ளதை நம்ப முடியவில்லை என்று சொல்கிறார்கள். 'கேஜிஎப் 2' படத்தின் மொத்த வசூலே 130 கோடி என்றிருக்கும் போது அதற்கு 10 கோடி குறைவாக 'டாக்சிக்' படத்தை எப்படி வாங்கியிருக்க முடியும் என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்.
இந்தப் படத்தை வாங்கியிருக்கும் தயாரிப்பாளர், வினியோகஸ்தர் தில் ராஜு, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களின் வசூல் நிலவரம் பற்றி நன்கு அறிந்தவர். மேலும், இவ்வளவு அதிக தொகை கொடுத்து அவர் வாங்கியிருக்கவே மாட்டார் என்றும் அடித்துச் சொல்கிறார்கள். படத்தின் பில்டப்பிற்காக இப்படி சொல்கிறார்கள் என்றும் பேச்சு எழுந்துள்ளது.
படம் வெளியாகி வசூல் நிலவரம் வரும் போதுதான் இவ்வளவு விலை சரியா, தவறா என்பது தெரிய வரும்.




