பீரியட் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய வேண்டும் : பரூக் ஜே.பாஷா ஆசை | மகனை நடிகனாக்கிய தயாரிப்பாளர் | தினமும் நெல்லிக்காய் ஜூஸ், வாரத்துக்கு ஒரு தடவை அரிசி சாதம் : டயட் ரகசியம் சொல்லும் அருண்விஜய் | ஜெயிலர் 2வில் குத்தாட்டம் போடும் நோரா பதேகி யார் தெரியுமா? | முதல்வருடன் பாதிக்கப்பட்ட நடிகை சந்திப்பு: பலாத்கார வழக்கில் மேல்முறையீடு செய்ய கோரிக்கை | கேரள திரைப்பட விழாவில் திரையிட 19 படங்களுக்கு மறுப்பு : கேரளா அமைச்சர் காட்டம் | பாபி சிம்ஹாவின் புதிய படம் தொடங்கியது | பிளாஷ்பேக்: கருணாநிதி படத்தை எதிர்த்து எம்ஜிஆர் போட்ட வழக்கு | திலீப் விஷயத்தில் மோகன்லால் இப்படி செய்யலாமா? : நடிகை கேள்வி | பிளாஷ்பேக்: முதல் படத்திலேயே காதல், கல்யாணம், தாயின் மரணத்தை சந்தித்த நடிகை |

மோகன்லால் மலையாளத்தில் தற்போது தன்னுடைய 360வது படத்தில் நடித்து வருகிறார். 15 வருடங்களுக்கு பிறகு நடிகை ஷோபனா மோகன்லாலுடன் இணைந்து நடித்து வரும் இந்த படத்தை இயக்குனர் தருண் மூர்த்தி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் கொச்சியில் சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றில் மோகன்லால் கலந்து கொண்டார்.
அப்போது மேடையில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தில் அனிருத் இசையில் ஹிட்டடித்த ஜிந்தா பந்தா என்கிற பாடலுக்கு நடன கலைஞர்களுடன் சேர்ந்து நடனம் ஆடினார். அது மட்டுமல்ல ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ரஜினிகாந்தின் ஹுக்கும் பாடலுக்கும் மேடையில் பெர்பார்மன்ஸ் செய்து அசத்தி ரசிகர்களின் கைதட்டலை அள்ளினார் மோகன்லால்..
தனது பாட்டிற்கு மோகன்லால் நடனம் ஆடியது குறித்து ஷாருக்கான் கூறும்போது, “இந்த பாடலை எனக்கு இப்பொழுது இன்னும் அதிக ஸ்பெஷலாக மாற்றியதற்காக நன்றி மோகன்லால் சார். நீங்கள் ஆடியதில் பாதியாவது சிறப்பாக நான் ஆடி இருந்திருக்கலாம். லவ் யூ சார். எனது வீட்டில் உங்களுக்கு விருந்தளிக்க காத்திருக்கிறேன். நீங்கள் தான் இந்த ஜிந்தா பந்தாவின் ஓ ஜி” என்று கூறியுள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள மோகன்லால், “உங்களைப் போல ஒருவராலும் ஆட முடியாது ஷாருக். நீங்கள் தான் எப்பொழுதும் ஜிந்தா பந்தாவின் ஓ ஜி ஆக இருப்பீர்கள். உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி. டின்னரை பற்றி கேட்கிறீர்களா ? நாம் ஏன் ஜிந்தா பந்தா பாடலை நமது காலை உணவின் போது சேர்ந்து பாடக்கூடாது ?” என்று பதில் அளித்துள்ளார்.