ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஆதித்யா சேனலில் தல தளபதி நிகழ்ச்சி நடத்தி வருபவர் அசார். ஏன்டா தலையில எண்ணெய் வைக்கல, சாரல் போன்ற படங்களிலும் ஹீரோவாக நடித்துள்ளார். சிவகார்த்திகேயனை பார்த்துதான் உங்களைப்போன்ற தொகுப்பாளர்களுக்கு சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை வந்தா? என்று அவரைக் கேட்டால், அதை மறுக்கிறார் அசார்.
சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே பல தொகுப்பாளர்கள் சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்று வந்துள்ளனர். அவருக்கு பிறகு வந்த தொகுப்பாளர்களும் இருக்கிறார்கள். அதனால் தொகுப்பாளர்களுக்கு சிவகார்த்திகேயன்தான் ரோல் மாடல் என்று சொல்ல முடியாது. ஒருத்தர் டிவியில் இருந்து வந்து சினிமாவில் ஜெயித்ததினால் அவரைப்பார்த்துதான் மற்ற தொகுப்பாளர்களும் சினிமாவுக்குள் வருவதாக நினைக்கிறார்கள்.
என்னைப்பொறுத்தவரை சினிமா ஆசை என்பது சின்ன வயதிலேயே வந்ததுதான். ஆனால் சிவகார்த்திகேயன் சினிமாவில் ஜெயித்த பிறகு மக்கள் நம்மையும் ஏற்றுக்கொள்வார்கள் என்ற தைரியம் வந்தது. அந்த பக்கம் போகாதீங்க பேய் இருக்குன்னு சொல்லுவாங்க. ஆனா ஒரேயொருத்தர் மட்டும் போய் வந்த பிறகு எல்லோருமே தைரியமா போவாங்க இல்லியா, அந்த மாதிரி ஆயிடுச்சு.
மேலும், முதன்முதலாக டிவியில் இருந்து போய் சினிமாவில் காமெடியனாக ஜெயித்தது சந்தானம். அதன்பிறகு ஹீரோவாக ஜெயித்தவர் சிவகார்த்திகேயன். அந்த வகையில் இவங்க என்னைப் போன்ற தொகுப்பாளர்களின் தைரியத்துக்கு ரோல்மாடல் என்றுதான் சொல்ல வேண்டும். நல்லா நடிச்சா போதும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற தைரியம் இப்போது ஏற்பட்டுள்ளது என்கிறார் ஆதித்யா சேனல் தொகுப்பாளர் அசார்.