ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பல சீரியல்களில் ஹீரோ-வில்லன் என நடித்து வருபவர் பரத். பொம்மலாட்டம் சீரியலில் ஹீரோவாக நடித்த அவர், தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் யாரடி நீ மோகினி தொடரில் வில்லனாக நடித்து வருகிறார். மேலும், சினிமாவைப்போலவே சின்னத்திரையிலும் வேற்று மொழி நடிகர் நடிகைகளை கொண்டு வந்து நடிக்க வைக்கிறார்கள். இதனால் தமிழ் சீரியல்களையே நம்பிக்கொண்டிருக்கும் நடிகர் நடிகைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்கிறார் பரத். தினமலர் இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டி...
சமீபகாலமாக சின்னத்திரை தொடர்களில் 90 சதவிகிதம் வேற்று மொழி நடிகர் நடிகைகள் கொண்டு வந்து நடிக்க வைக்கிறார்கள். இதனால் தமிழ் சீரியல் நடிகர் நடிகைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதனால் தான் சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தமிழர்களின் நிறமே கருப்புதான். ஆனால் அவர்கள் வெள்ளையாக இருக்க வேண்டும் என்கிறார்கள். மக்கள் அப்படி கேட்கவில்லை. சீரியல் எடுப்பவர்களின் எண்ணம் அப்படி இருக்கிறது.
இந்தி சீரியல்களுக்கு டிஆர்பி வருகிறது. அந்த மாதிரியே தமிழ் சீரியல்களும் இருந்தால்தான் டிஆர்பி வரும் என்று நினைக்கிறார்கள். அதே பிரமாண்டத்தை குவாலிட்டியை இங்கேயும் கொடுத்தால் ஏன் கிடைக்காது. நம்ம கலாச்சாரத்துக்கு என்னவோ அதைத்தானே கொடுக்க முடியும். அவர்கள் கிளாமராக இருக்கிறார்கள் அது நம்ம கலாச்சாரத்துக்கு செட்டாகுமா? அதற்காகவே தமிழ் தெரியாதவர்களை அழைத்து வந்து சீரியல்களில் நடிக்க வைக்கிறார்கள். ஒரு சில சீரியல்களில் தமிழ் கலாச்சாரத்தை அழிக்கிற முயற்சியும் நடக்கிறது.
இங்கே இருக்கிற நடிகர் நடிகைகள் நடிப்பில் யாரை விடவும் குறைந்தவர்கள் இல்லை. இங்கே இருப்பவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து நல்ல சீரியல்கள் எடுத்தாலே டிஆர்பி கிடைக்கும். தமிழ் நடிகர் நடிகைகள் நடித்து எத்தனையோ சீரியல்கள் பிரபலமாகியுள்ளன. மெட்டி ஒலி, திருமதி செல்வம், உறவுகள், பொம்மலாட்டம் எல்லாமே ஹிட்டுதான். நல்ல கதைகள் கொடுத்தால் யார் நடித்தாலும் சீரியல்கள் ஹிட்டாகி விடும்.
நந்தினி என்றொரு சீரியல் 4 மொழிகளில் வருகிறது. கர்நாடகாவில் டெலிகாஸ்ட் பண்ண விடவில்லை. காரணம், கன்னட ஆர்ட்டிஸ்ட் அதிகமாக இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். அங்குள்ள நடிகர் நடிகைகளை அதிகமாக நடிக்க வைத்த பிறகுதான் நந்தினி சீரியலை கர்நாடகாவில் ஒளிபரப்ப அனுமதித்தனர். அதேபோல் இங்கிருப்பவர்களும் தமிழ் நடிகர் நடிகைகளுக்கு சான்ஸ் கொடுக்குமாறு வலியுறுத்த வேண்டும். நான் எப்போதுமே டப்பிங் சீரியல் களுக்கு எதிரானவன்தான். போராட்டம் பண்ணவும் நான் ரெடி.
மேலும், தமிழர்களுக்கு சம்பளம்கூட பெரிதாக கொடுப்பதில்லை. ஆனால் பெங்களூரில் இருந்து நடிகர் நடிகைகளை அழைத்து வந்து ரூம் போட்டு கொடுத்து, சம்பளமும் அதிகமாக கொடுத்து நடிக்க வைக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு தமிழ் வார்த்தைகூட தெரியாது. நம்முடைய நடிகர்களைவிட சிறந்த நடி கர்களும் இல்லை. சின்னத்திரை நடிகர் சங்கத்தில்1500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அதேபோல் உறுப்பினர் அல்லாதவரை அழைத்து வந்து நடிக்க வைக்கிறார்கள். சீரியலையே நம்பியிருப்பவர்களுக்கு சான்ஸ் கொடுப்பதில்லை.
உறுப்பினர் அல்லாதவர்களுக்கு சான்ஸ் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். ஆனால் பெரிதாக அழுத்தம் கொடுக்கவில்லை. சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தில் இருப்பவர்களே தங்களது சீரியல்களுக்கு புதுசு புதுசாக மொழி தெரியாதவர்களை கொண்டு வந்து நடிக்க வைக்கிறார்கள். இதுதான் பெரிய கொடுமையாக உள்ளது. இதற்கு சீக்கிரமே ஒரு பெரிய எதிர்ப்பு கிளம்பும். அந்த எதிர்ப்பு இளைஞர்கள் மத்தியில் இருந்து வரும். பெரிய திரையில் எப்படி ஒரு மாற் றம் வந்ததோ, அதேபோல் சின்னத்திரையிலும் ஒரு பெரிய எதிர்ப்பு தெரிவிக்க தயாராகிக்கொண்டிருக்கிறோம் என்கிறார் நடிகர் பரத்.