ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மும்பை மாடலாக தன் கேரியரை தொடர்ந்தவர் குஜராத்தைச் சேர்ந்த பிரியல் கோர். வெற்றிகரமான மாடலாக வலம் வந்தவர் 2010ம் ஆண்டில் இஷான் தொடர் மூலம் சின்னத்திரைக்கு வந்தார். இப்போது இந்தி சின்னத்திரை உலகின் முன்னணி நாயகி. இதுவரை 10 பிரமாண்ட தொடர்களில் நடித்தவர். தற்போது இச்சாபியாரி நாகினி என்ற தொடரில் நடித்து வருகிறார். இதற்கிடையில் ஜஸ்ட் யூ அண்ட் மீ என்ற பஞ்சாபி படத்திலும், சாபே சுப்ரமண்யம் என்ற தெலுங்கு படத்திலும், அனார்கலி என்ற மலையாளப் படத்திலும் நடித்துள்ளார்.
தற்போது இவர் இந்தியில் நடித்து வரும் இச்சாபியார் நாகினி பாலிமர் தொலைக்காட்சியில் பிரியமுடன் நாகினி என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடரில் பிரியல் கோர் நாகினியாக நடிக்கிறார்.
காமெடி மற்றும் திகில் கதையாக இந்த தொடர் நகர்கிறது. மந்திரவாதியும், நாகினியும் தற்போது நேருக்கு நேர் மோதிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். நாகினியாக நடிக்கும் பிரியல்கோரின் அழகுக்கும், நடிப்புக்குமாகவே பெண்கள் டி.வி.முன் உட்காருகிறார்கள். விரைவில் தமிழ் சினிமாக்களிலும் பிரியல் கோரை பார்க்கலாம் என்கிறது சேனல் வட்டாரம்.