ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் | குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி | கூலி டீசர் குறித்து விமர்சிக்கவில்லை : வெங்கட் பிரபு விளக்கம் | நடிப்பு குறித்து கிண்டலடித்த ரசிகைக்கு காட்டமாக பதில் அளித்த மாளவிகா மோகனன் | ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன் | மகளுடன் இணைந்து நடிக்கும் ஷாரூக்கான் | ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' | பின்னணி இசை இல்லாத படம் | பிளாஷ்பேக் : திரையில் காமெடி நடிகை, நிஜத்தில் ஹீரோயின் |
விஜய் டிவியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் தொடர் சரவணன் மீனாட்சி. இந்த தொடரில் முதல் பாகத்தில் மிர்ச்சி செந்தில்- ஸ்ரீஜா ஜோடி சேர்ந்து
நடித்தனர். அதில் நடித்து வந்தபோதே அவர்களுக்கிடையே காதல் உருவாகி
பின்னர் திருமணமும் செய்து கொண்டனர். அதன்பிறகு அந்த சீரியலின் இரண்டாவது பாகத்தில் கவின்ராஜ் நாயகனாக நடிக்க, ரக்ஷிதா மகாலட்சுமி நாயகியாக நடித்தார். இவர்களும் டிவி நேயர்கள் மத்தியில் பேசப்படும் ஜோடியாக வலம்வந்தனர்.
இந்த நிலையில், தற்போது சரவணன் மீனாட்சி தொடரில் மூன்றாவது பாகம் தொடங்கியிருக்கும் நிலையில், இரண்டாவது பாகத்தில் நடித்த கவின்ராஜ்க்கு பதிலாக ரியோ என்ற புதியவர் நடிக்கிறார். ஆனால், நாயகியாக இரண்டாவது பாகத்தில் நடித்த ரக்ஷிதா மகாலட்சுமியே மூன்றாவது பாகத்திலும் தொடருகிறார். மீண்டும் அவர் இடம் பெறுவதற்கு முக்கிய காரணம், ரக்ஷிதாவிற்கு நிறைய ரசிகர் -ரசிகைகள் உள்ளார்களாம். அவரது அசத்தலான நடிப்புக்காகவே அந்த சீரியலை ஏராளமானோர் பார்த்து ரசித்து வந்தார்களாம். இந்த வரவேற்பு காரணமாகத்தான் சரவணன் மீனாட்சியின் மூன்றாவது பாகத்திலும் ரக்ஷிதாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.