சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' | 2025 படங்களில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | இயக்குனராக மாறிய கருணாஸ் மகன் படம் துவங்கியது : பள்ளிக்கூட பின்னணியில் கதை நடக்கிறது |

நடிகை ஸ்ருதிஹாசன் இரண்டு, மூன்று காதல்களை கடந்து வந்தவர். கடைசியாக சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வந்தார். இருவரும் மும்பையில் ஒரே வீட்டில் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தனர். அவ்வப்போது, சாந்தனுவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை தனது சமூகவலை தளத்தில் பகிர்ந்து வந்தார் ஸ்ருதிஹாசன். இருவரும் பார்ட்டி, பங்ஷன்களில் ஜோடியாக சுற்றி வந்தனர்.
இருவரும் பிரிந்து விட்டதாக சமீபகாலமாக தகவல்கள் வெளியாகி வந்தது. இதனை இருவருமே மறுக்கவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ருதிஹாசன், தனது காதலர் சாந்தனுவை சமூகவலை தளப்பக்கத்தில் பின்தொடர்வதை நிறுத்தியுள்ளார். மேலும், சாந்தனுவுடன் இருக்கும் அனைத்து படங்களையும் தனது பக்கத்தில் இருந்து நீக்கி விட்டார். இதன் மூலம் இருவரும் பிரிந்து விட்டது உறுதியானது. எதற்குமே உடனடியாக விளக்கம் அளிக்கும் ஸ்ருதிஹாசன் இந்த விஷயத்தில் இதுவரை மவுனமாகவே இருந்து வருகிறார்.
இந்த நிலையில் இதுகுறித்து சாந்தனுவை சமூகவலைத்தளத்தில் பின்தொடர்கிறவர்கள் தொடர்ந்து அவரிடம் கேட்டு வந்தனர். தற்போது சாந்தனு 'மன்னித்து விடுங்கள். இதுபற்றி பேச விரும்பவில்லை. அது தனிப்பட்ட விஷயம்' என்று பதலளித்திருக்கிறார். இதன் மூலம் தங்களது பிரிவை சாந்தனு பிரிவை உறுதிப்படுத்தி உள்ளார்.




