ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 'ஸ்ரீவெங்கடேஷ்வரா' என்ற பக்தி சேனல் நடத்தப்பட்டு வருகிறது. இது திருப்பதி திருமலையிலிருந்து ஒளிபரப்பாகிறது. இந்த சேனல் தெலுங்கு மொழியில் மட்டும் ஒளிபரப்பாகும். தினமும் ஒரு மணிநேரம் தமிழ் மொழியில் ஒளிபரப்பாகும். தமிழில் முழுநேர பக்தி சேனல் தொடங்க தேவஸ்தானம் முடிவு செய்தது. இதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசுக்கு விண்ணப்பித்தது.
24 மணி நேர தமிழ் பக்தி சேனலுக்கான சேட்டிலைட் வசதி, தொழில்நுட்ப வசதி அனைத்தையும் செய்து முடித்து விட்டது தேவஸ்தானம். அரசின் அனுமதி கிடைத்துவிட்டால் ஒளிபரப்பை துவக்கி விடும். தற்போது ஆந்திராவை சேர்ந்தவரும் திருப்பதி வெங்கடாஜலபதியின் தீவிர பக்தருமான வெங்கய்யா நாயுடு தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சராகிவிட்டதால் எளிதில் அனுமதி கிடைக்கும் என்ற தெரிகிறது. சமீபத்தில் டில்லி சென்ற திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் சாம்பசிவராவ் டில்லியில் வெங்கய்யா நாயுடுவை சந்தித்து கோரிக்கை வைத்து வந்துள்ளார். எனவே விரைவில் தமிழில் 24 மணி நேர பக்தி சேனல் தொடங்கப்படும் என்று தெரிகிறது.