ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இமயம் மற்றும் கேப்டன் டி.வியில் தொகுப்பாளராக இருந்த பிரியங்கா இப்போது பிசியான சீரியல் நடிகை. நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் மூலம் நடிக்க ஆரம்பித்தார். அதன்பிறகு சரவணன் மீனாட்சி, பைரவி தொடர்களில் நடித்தார். இப்போது பிரியமானவளே, வம்சம் தொடர்களில் நடித்து வருகிறார்.
நடிகை ஆகிவிட்டாலும் அவ்வப்போது தொகுப்பாளினியாகவும் அவதாரம் எடுக்கிறார். நடிப்பு, தொகுப்பு இரண்டிலும் சாதனை படைக்க விரும்பினாலும் அவருக்கு இன்னொரு விருப்பம் இருக்கிறதாம். அது ஐ.ஏ.எஸ் தேர்வெழுதி கலெக்டர் ஆக வேண்டும் என்பது. இதற்காக இப்போது தீவிரமாக படித்துக் கொண்டிருக்கிறார். “என்னதான் நடிகை, தொகுப்பாளினி என்றாலும் இதன் மூலம் மக்களை எண்டர்டெயின்மெண்ட்தான் பண்ண முடியும். மக்களுக்கு சேவை செய்யணும்னா கலெக்டர் ஆகணும். அதற்காக தொடர்ந்து முயற்சி பண்ணுவேன்” என்கிறார் பிரியங்கா. இதையேதான் நடிகை ஆர்த்தி பத்து வருடமாக சொல்லி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.