ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இயக்குனர் சமுத்திரகனி தற்போது 'அப்பா' என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தின் புரமோசனுக்காக சினிமா வி.ஐ.பிக்கள் தங்கள் அப்பா குறித்த நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள். சினிமாவை தாண்டி சின்னத்திரை தொகுப்பாளர் ரம்யாவும் தன் அப்பா பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:
என் அப்பா பற்றிய நிறைய பேசலாம். என்னை ரம்யான்னு கூப்பிடுவதை விட ரம்யா சுப்பிரமணியம் என்று அழைப்பதையே பெருமையாக நினைக்கிறேன். என்னோட அப்பா கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர். அந்த கஷ்டத்தை நாங்கள் படக்கூடாது என்று எங்களை செல்லமாக வளர்த்தார். நாங்கள் கேட்டதெல்லாம் உடனே வாங்கிக் கொடுத்தார். இதை செய், அதை செய்யாதே என்று எங்களுக்கு அறிவுரை சொன்னதே இல்லை. அவர் அதை வாழ்ந்து காட்டுவார் நாங்கள் புரிந்து கொள்வோம். நேரம் தவறாமை, எல்லோரையும் சமமாக மதித்தல், எல்லோரிடத்தும் அன்பு செலுத்துதலை கற்றுக் கொடுத்தார்.
சமீபத்தில் என் வாழ்க்கையில் ஒரு கடுமையான பகுதியை நான் கடந்த போது நான் எடுத்த முடிவு சரியானது தானா, சரியான பாதையில் தான் செல்கிறோமா என்கிற குழப்பத்தில் தவித்தபோது கூட இருந்து எனக்கு வழிகாட்டியவர் அப்பாதான். அவர் இல்லாமல் நான் இல்லை. என்னிடம் யாராவது உங்களுக்கு பிடித்தவர் யார் என்று கேட்டால் அப்பா அப்பா என்று ஆயிரம் முறை சொல்வேன். என்று கூறியுள்ளார் ரம்யா.