ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இசைஞானி இளைராஜா தாரை தப்பட்டை படம் வரை ஆயிரம் படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இதனை 999வது படமான ஷமிதாப் இந்திப் படத்தின் இயக்குனர் பால்கி மும்பையில் கொண்டாடினார். அமிதாப்பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். சென்னையில் நேரு உள் விளையாட்டரங்கில் பாலா, இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்து திட்டமிட்டார். அந்த நேரத்தில் சென்னையில் பேய் மழை, பெருவெள்ளம் வந்ததால் நடத்த முடியவில்லை. இப்போது இளையராஜா மியூசிக் மேனேஜ்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து விஜய் டி.வி பிரமாண்டாக நடத்துகிறது. வருகிற 27ந் தேதி நேரு உள்விளையாட்டரங்கில் இது நடக்கிறது.
இதுகுறித்து விஜய் டி.வி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இசையால் அனைவரையும் நெகிழச் செய்தவருக்கு இந்த விழா ஒரு சமர்ப்பணம். மக்கள் வியந்து ரசித்த இளையராஜாவின் இனிமையான பாடல்கள் அந்த பிரமாண்ட மேடையில் இளையராஜாவிற்கு காணிக்கையாக சமர்பிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த திரையுலகமும் பங்கேற்று இசைஞானிக்கு கவுரம் சேர்க்க இருக்கிறது. கலையுலம் கண்டிராத பெருவிழாவாக இது இருக்கும். என்கிறது விஜய் டி.வி.