பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
பொதுவாக தீபாவளி பண்டிகைக்கு தொலைக்காட்சி சேனல்களில் புதிய படங்களை ஒளிபரப்புவார்கள். அதிலும் குறிப்பாக ஹிட்டான பெரிய ஹீரோக்களின் படங்களை. அந்த வகையில் வருகிற தீபாவளிக்கு மாரி, தனி ஒருவன், இன்று நேற்று நாளை, மீகாமன் போன்ற படங்கள் ஒளிபரப்பாகிறது.
இந்த ஆண்டு தீபாவளிக்கு முன்பே விடுமுறை நாட்களில் புதிய படங்களை சேனல்கள் ஒளிபரப்புகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கமல் நடித்த உத்தம வில்லன், அருள்நிதி நடித்த டிமாண்டி காலனி ஆகியவை ஒளிபரப்பானது. இரண்டு படங்களுமே மிகச் சமீபத்தில் வெளிவந்தவை. தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இரண்டு புத்தம் புதிய படங்கள் ஒளிபரப்பானது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சேனல் வட்டாரத்தில் விசாரித்த போது கிடைத்த தகவல்: புதுப்படங்களை ஒளிபரப்ப ஆதாரமாக இருப்பது அதில் ஒளிபரப்பாகும் விளம்பரங்கள்தான். ஆனால் தீபாவளியன்று ஒளிபரப்பாகும் படங்களில் விளம்பரம் செய்ய வியாபார நிறுவனங்கள் தயக்கம் காட்டுகிறது. தீபாவளிக்கு மக்கள் தங்களிடம் பொருட்கள் வாங்க வேண்டும் என்றுதான் வியாபார நிறுவனங்கள் விளம்பரம் செய்கின்றன. மக்களிடம் புழங்கும் தீபாவளி போனஸ் பணத்தை குறிவைத்துதான் வீட்டு உபயோக பொருளில் இருந்து வாகனங்கள் வரை விளம்பரம் செய்கின்றன.
தீபாவளிக்கு புதிய படங்கள் ஒளிபரப்பாகும்போது அதில் விளம்பரம் செய்வதால் பெரிய பலன் இல்லை. காரணம் மக்கள் தீபாவளி பர்சேசிங்கை முன்பே முடித்திருப்பார்கள். எனவே வியாபார நிறுவனங்கள் தீபாவளிக்கு முன்னதாக விளம்பரம் செய்ய விரும்புவதால் தீபாவளிக்கு முந்தைய சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் புதிய படங்களை ஒளிபரப்புகிறார்கள். வருகிற சனி மற்றும் ஞாயிறிலும் புத்தம் புதிய படங்கள் ஒளிபரப்பாகும். என்கிறார்கள்.