ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
அழகான நாட்கள், அபிராமி, வெள்ளைத்தாமரை, ரோமாபுரி பாண்டியன், சந்திரலேகா, 63 நாயன்மார்கள் என பல தொடர்களில நடித்திருப்பவர் ஸ்ரீஹரி. பாசிட்டீவ், நெகடீவ் என எல்லாவிதமான கேரக்டர்களில் நடித்திருக்கும் இவர், கடந்த 9 ஆண்டுகளாக சீரியல்களில் நடித்து வருகிறார்.
தனது சின்னத்திரை பயணம் குறித்து ஸ்ரீஹரி கூறுகையில், இந்த மாதிரியான வேடங்களில் மட்டும்தான் நடிக்க வேண்டு என்கிற குறிக்கோளுடன் நான் நடிக்க வரவில்லை. அதனால்தானோ என்னவோ எல்லாவிதமான கேரக்டர்களிலும் நடித்து விட்டேன். அதன்காரணமாகவே, இவர் இந்த மாதிரியான நடிகர் என்கிற இமேஜில் நான் சிக்கவில்லை. அதுவே எனக்கு பெரிய சந்தோசமாக உள்ளது.
மேலும், ரோமாபுரி பாண்டியன் தொடரில் சரித்திர கதையிலும் நடித்து விட்டேன். அந்த அனுபவம் ரொம்ப வித்தியாசமானது. அதாவது அதில் நாடகத்தன்மையுடன் நடிக்க வேண்டும். மற்ற கதைகளில் நடிப்பதை விட சற்று ஓவராக நடிக்க வேண்டும். நான் கல்லூரியில் படித்தபோதே நாடகங்களில் நடித்திருப்பதால் எனக்கு அது எளிதாகவே இருந்தது. அப்படி நாடகத்தில் நடித்த அனுபவம் இருந்ததினால்தான் நான் நடிக்கவே வந்தேன். அதோடு, விசுவல் எபெக்ட்ஸ் படித்துள்ள எனக்கு டெக்னீசியனாக வேண்டும் என்பது இன்னொரு ஆசையாகவும் இருந்து வருகிறது.
இப்படி கூறும் ஸ்ரீஹரி, பெண்களை இலக்காக வைத்தே தயாரிக்கப்பட்டு வரும் டிவி சீரியல்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகவே செல்வதால் பெண்களின் மனதில் இடம் பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். என்னதான் டைட்டீல் கேரக்டர்களில் நடிகைகளே நடித்தாலும், சில சீரியல்களில் ஆண்களுக்கும் முக்கியத்துவம் உள்ளது. அந்த வகையில் தற்போது நான் நடித்து வரும் சந்திரலேகா தொடரில் நான் நடிக்கும் வில்லன் வேடத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. எனது நடிப்புக்கு பெண்கள் மத்தியில் இருந்து பாசிட்டீவ், நெகீடீவ் என இரண்டுவிதமான விமர்சனங்களும் கிடைத்து வருகிறது.
அதோடு, என்னைப்பொறுத்தவரை இந்த மாதிரியான வேடங்களில்தான் நடிக்க வேண்டும் என்று நான் எந்தவித முயற்சியும் எடுப்பதில்லை. டைரக்டர்கள் என்னை எந்தமாதிரியான வேடங்களில் நடிக்க அழைக்கிறார்களே அதில் நடிக்கிறேன். காரணம், என் கெபாசிட்டிக்கு எந்த மாதிரியான கேரக்டர்கள் செட்டாகும் என்பது அவர்களுக்குத்தான் தெரியும். அதனால் டைரக்டர்களின் முடிவுதான் என் முடிவாக இருக்கிறது என்று கூறும் ஸ்ரீஹரி, இப்போது மட்டுமின்றி எப்போதுமே நான் டைரக்டர்களின் நடிகராகவே இருப்பேன் என்கிறார்.