சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! |
ஆழ்வார் படத்தில் அஜீத்தின் தங்கையாக நடித்தவர் ஸ்வேதா, மும்பை பொண்ணு. அதன் பிறகு சில படங்களில் தங்கை கேரக்டரில் நடித்தவர் வள்ளுவன் வாசுகி படத்தில் ஹீரோயின் ஆனார். இதயம் திரையரங்கம், கூட்டாஞ்சோறு, நான்தான் பாலா, பட்டைய கிளப்பணும் பாண்டியா படங்களில் ஹீரோயினாக நடித்தார். தற்போது சின்னத்திரையில் நடித்து வருகிறார்.
சின்னத்திரையில் அதிக சுதந்திரம் இருக்கிறது என்கிறார் ஸ்வேதா. அவர் மேலும் கூறியதாவது:
சினிமாவில் நமக்கு மேல் பெரிய சீனியர்கள் இருப்பார்கள். அதனால் அவர்களுக்கு மரியாதை கொடுத்து பவ்யமாக இருக்க வேண்டும். சிலர் வந்தால் எழுந்து நின்ற மரியாதை தரவேண்டும். எதையும் பார்த்து பார்த்து செய்யணும். சின்னத்திரையில் அப்படியில்லை. சுதந்திரமாக இருக்கலாம். எல்லோருடனும் சகஜமாக பழகலாம்.
சினிமா மாதிரி கவர்ச்சியாக நடிக்க வேண்டியதில்லை. மரத்தை சுற்றி டூயட் பாட வேண்டியதில்லை. நமக்கு கொடுத்த கேரக்டரை சரியாக செய்து முடித்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம். இந்த காரணங்களால்தான் நான் சின்னத்திரையை தேர்ந்தெடுத்தேன். ஆனாலும் சினிமாவை விட்டு முழுமையாக விலகவில்லை. தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறேன். என்கிறார் ஸ்வேதா.