ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ந் தேதி முதல் விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வந்த மகாபாரதம் தொடர் பெரும் வரவேற்பை பெற்றது. இதற்கு முன்பு மகாபாரத தொடர் பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானாலும், இந்த தொடருக்கு தனி வரவேற்பு இருந்தது. காரணம் இந்த தொடர் மகாபாரதத்தின் கிளை கதைகளுக்கு முக்கியத்தும் கொடுத்தது. ஒவ்வொரு கேரக்டர்களின் கதை, பின்னணி ஆகியவற்றை சொல்லி அதனை மகாபாரத கதையுடன் இணைத்தது.
இந்த பாணி மக்களை மிகவும் கவர்ந்தது. சத்யவதி-ஷாந்தனு கதையில் தொடங்கி மகாபாரத போருடன் நிறைவடைகிறது. கேரக்டர்களுகேற்ற நடிகர்கள் தேர்வு, அவர்களின் மிரட்டலான நடிப்பு, பிரமாண்ட அரங்குகள், பிரமிக்க வைக்கும் ஒப்பனை என மகாபாரத்தின் ஒவ்வொரு எபிசோடும் ஒரு திரைப்படத்துக்கு நிகராகவே அமைந்திருந்தது. இந்த தொடர் வருகிற 30ந் தேதியுடன் நிறைவடைகிறது.