ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சின்னத்திரை சீரியல்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த ஸ்ரீவித்யா, திருமணம் செய்த பிறகு நடிப்பதைக் குறைத்தார். குழந்தை பிறந்த பிறகு நடிப்பதையே நிறுத்தினார். இப்போது குழந்தை வளர்ந்து விட்டதால் மீண்டும் நடிக்க வந்துவிட்டார்.
தென்றல், சித்திரம் பேசுதடி, பொன்னூஞ்சல் தொடர்களில் நடித்து வருகிறார். "திருமணத்துக்கு முன்பு நிற்க நேரமில்லாமல் நடித்துக் கொண்டிந்தேன். திருமணம், குழந்தை என்று என்னை ரிலாக்ஸ் பண்ணிக்கொண்டேன். இப்போது மீண்டும் நடிக்க வந்து விட்டாலும் குழந்தையை கவனிக்க வேண்டும் என்பதால் நடிப்பதை குறைத்துக் கொண்டேன். தேர்ந்தெடுத்த சீரியல்களில் மட்டுமே நடிக்கிறேன். என்கிறார் ஸ்ரீவித்யா.