ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சினிமா இரண்டரை மணி நேரம் ஓடும். ஆனால் சின்னத்திரை சீரியல் ஆயிரம் எபிசோட்களை தாண்டும். அதாவது ஆயிரம் மணிநேரத்தையும் தாண்டி ஓடும். சீரியலில் சிறிய கேரக்டர்களில் நடிப்பவர்கள், அதிலிருந்து விலகி விட்டாலோ, அல்லது மரணம் அடைந்து விட்டாலோ கதையிலும் அவர் இறந்துவிட்டதாக காட்டி விடுவார்கள். அல்லது கண்டுகொள்ளாமல் விட்டு விடுவார்கள். ஆனால் முக்கிய கேரக்டர்களில் நடிப்பவர்கள் விலகிக் கொண்டால் அவருக்கு பதிலாக இன்னொருவரை நடிக்க வைப்பார்கள். "அவருக்கு பதில் இவர்" என்று டைட்டில் கார்டு போடுவார்கள். இது எப்போதாவது நடக்கிற ஒன்று. ஆனால் சமீபகாலமாக இது அதிகரித்துள்ளது.
புகழ்பெற்ற சரவணன் மீனாட்சி தொடரில் சரவணனாக நடித்துக் கொண்டிருந்த இர்பான், சினிமாவில் நடிக்க போய்விட்டதால் தற்போது சரவணனாக வெற்றி நடிக்கிறார். இரண்டாவது பகுதியின் 200 வது எபிசோடில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
உறவுகள் சங்கமம் தொடரில் 25 எபிசோட்கள் முடிந்துவிட்ட நிலையில் இப்போது பாரதிக்கு பதில் ஸ்ரீதுர்கா நடிக்கிறார். அழகி தொடரில் சாலு குரியன் நடித்த கேரக்டரில் இப்போது குட்டி பூஜா நடிக்கிறார். வாணி ராணி தொடரில் ராதிகாவின் மகனாக 400 எபிசோட்கள் வரை நடித்த அஜீத்துக்கு பதிலாக மானஸ் நடிக்கிறார்.
தெய்வம் தந்த வீடு தொடரில் நடித்துக் கொண்டிருந்த சரண்யாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு விட்டதால் அவருக்கு பதிலாக மோனிகா நடிக்கிறார். மல்லி தொடரில் நடித்த சோனியா அகர்வால் அதிலிருந்து விலகிக் கொள்ள, இப்போது சாண்ட்ரியா நடிக்கிறார்.
"இந்த மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. முதலில் ரசிகர்கள் கொஞ்சம் குழம்புவார்கள். பின்னர் மாற்றத்தை ஏற்றுக் கொள்வார்கள். அவர்கள் கவனம் கதையில் ஆழ்ந்து இருப்பதால்தான் இந்த மாற்றங்களை செய்ய முடிகிறது" என்கிறார்கள் சின்னத்திரை இயக்குனர்கள்.