ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மலையாள தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளியான இருந்து சினிமாவுக்கு வந்த பாவனா, ரம்யா நம்பீசன், மீரா நந்தன் வரிசையில் தெலுங்கு சேனல்களில் தொகுப்பாளினியாக இருந்து தமிழ் ஹீரோயின் ஆகியிருக்கிறார் ஸ்ரீமுகி. ராட்டினம் படத்தை இயக்கிய தங்கசாமி சொந்தமாக தயாரித்து இயக்கும் எட்டுதிக்கும் மதயானைதான் ஸ்ரீமுகி நடிக்கும் முதல் படம். அடுத்து இரண்டு படங்களில் நடிக்கவும் கமிட் ஆகியிருக்கிறார்.
"தமிழ் நாட்டில் சின்னத்திரை கலைஞர்கள் எளிதாக பெரிய திரைக்கு வந்து விடுகிறார்கள். ஆந்திராவில் அது சாத்தியம் இல்லை அங்கு சின்னத்திரை கலைஞர்களையும், பெரிய திரை கலைஞர்களையும் பிரித்துதான் பார்க்கிறார்கள். அதனால்தான் தமிழில் வாய்ப்பு கிடைத்ததும் உடனே ஓகே சொல்லிவிட்டேன். தமிழ் நன்றாக கற்றுக் கொண்டுவிட்டேன். இனி தொடர்ந்து சினிமாவில்தான் நடிப்பேன், சின்னத்திரைக்கு திரும்பும் யோசனை இல்லை என்கிறார் ஸ்ரீமுகி.