நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
கன்னட சின்னத்திரையில் இருந்து 'வானத்தைப் போல' தொடரின் மூலமாக தமிழுக்கு வந்தவர் ஸ்வேதா. தற்போது 'கண்ணெதிரே தோன்றினாள்' தொடரில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ஸ்வேதா தனது நீண்ட நாள் காதலர் விராந்த் என்பவரை திருமணம் செய்துள்ளார். இருவரும் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர்.
ஸ்வேதா, விராந்த் திருமணம் நேற்று கர்நாடக மாநிலம் தும்கூரில் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். விராந்த் பெங்களூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். ஸ்வேதா திருமணத்திற்கு பிறகும் நடிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார்.