சிக்கந்தர் தோல்விக்கு காரணம் முருகதாஸா ? சல்மான் கானா ? ; ராஷ்மிகா பதில் | 'சர்வம் மாயா' இயக்குனரின் அடுத்த படத்திலும் இணையும் நிவின்பாலி | வந்தே மாதரம் பாடலை பாட ஏ.ஆர் ரஹ்மான் மறுத்தாரா ? சின்மயி பதில் | மோகன்லால் படத்தை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர் | நடிகரை அறைந்தாரா பூஜா ஹெக்டே? தீயாக பரவும் செய்தி | ஏப்ரல் 30ல் திரைக்கு வரும் தனுஷின் 'கர'? | ஓடிடியில் ஹிந்தியில் மட்டுமே வெளியான 'பாகுபலி தி எபிக்' | 'பார்டர்-2' படத்துடன் வெளியாகும் துரந்தர் -2 படத்தின் டீசர்! | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மெஹபூபா முப்தி! | மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! |

நாதஸ்வரம் சீரியலில் பாண்டி கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகர் பாண்டி கமல். அதன்பின் பல தொடர்களில் இவர் நடித்திருந்தாலும் நாதஸ்வரம் சீரியல் தான் இவருக்கான அங்கீகாரத்தை கொடுத்தது. பாண்டி கமல் தற்போது பூவா தலையா தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் தன்னை அறிமுகப்படுத்திய திருமுருகன் குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
பாண்டி கமல் பேசியபோது, ‛‛நாதஸ்வரம் சீரியல் மூலமாகத்தான் நான் இன்று நல்ல நிலையில் இருக்கிறேன். என்னுடைய மகள் பிறந்தநாள் விழாவுக்கு திருமுருகன் சாரை அழைக்க சென்றிருந்தேன். ஆனால், அவர் ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் பிசியாக இருந்தார். அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று மேனேஜரிடம் மட்டும் சொல்லிவிட்டு வந்துவிட்டேன். ஆனால், என் மகள் பிறந்தநாள் விழாவுக்கு அழைக்காமலேயே திருமுருகன் சார் முதல் ஆளாக வந்து தங்க கம்மலை பரிசாக கொடுத்தார்'' என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.




