ஹிந்தியில் அடுத்தடுத்து வாய்ப்புகளை பெறும் ஸ்ரீலீலா | விஜய் ஆண்டனியின் 'மார்கன்' ஜூன் 27ல் ரிலீஸ் | ரஜினி, கமலை இணைத்து படம் : முயற்சித்த லோகேஷ் | சம்பளத்தை உயர்த்த மாட்டேன் : சசிகுமார் உறுதி | அழகின் மீது திமிர் கொண்டவர் சுஹாசினி : பார்த்திபன் கலகலப்பு | ராம் சரணுக்கு கிரிக்கெட் பேட்டை பரிசாக வழங்கிய இங்கிலாந்து ரசிகர்கள் | சந்தான பட சர்ச்சை பாடல்: என்ன பிரச்னை? பாட்டில் அப்படி என்ன இருக்கிறது? | அடுத்தடுத்து இரண்டு 200 கோடி படங்கள் : கேக் வெட்டி கொண்டாடிய மோகன்லால் | கோவிந்தா பாடல்... சந்தானத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு : ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் | கேரளாவில் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு : ரஜினியைப் பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் |
மலையாள திரையுலகில் நடிப்பு திறமை, கவர்ச்சி என இரண்டையும் ஒன்றாக கொண்டவர் நடிகை ஸ்வேதா மேனன். இப்போதும் இவர் நடித்த ரதி நிர்வேதம் படம் தான் இவரது விலாசமாக ரசிகர்களிடம் அறியப்படுகிறது. ஆனால் அதையும் தாண்டி கடந்த சில வருடங்களுக்கு முன்பு 'களிமண்ணு' என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தார் ஸ்வேதா மேனன்.
அந்த படத்தை இயக்கியவர் தான் தற்போது பிரித்விராஜ் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் ஆடுஜீவிதம் படத்தை இயக்கியுள்ள இயக்குனர் பிளஸ்சி. 'களிமண்ணு' படத்திற்காக அப்போது நிஜமாகவே கர்ப்பமாக இருந்த ஸ்வேதா மேனன் தனது பிரசவத்தையே சினிமாவுக்காக படம் பிடிக்கும் அனுமதியையும் இயக்குனருக்கு வழங்கினார். அந்த சமயத்தில் அது பரபரப்பாக பேசப்பட்டது.
தற்போது ஆடுஜீவிதம் படம் வரும் மார்ச்-28ல் வெளியாகவுள்ள நிலையில் இயக்குனர் பிளஸ்சிக்கும் அவரது படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் ஸ்வேதா மேனன். இயக்குனர் பிளஸ்சி பற்றி அவர் கூறும்போது, “கிட்டத்தட்ட பிளஸ்சியின் 11 வருட தவம் இது. களிமண்ணு படத்தில் அவருடன் நான் பணியாற்றிக் கொண்டிருந்த நாட்களிலேயே அவர் இந்த கதையுடன் பயணிக்க துவங்கி விட்டார். இது பற்றிய அவர் என்னிடம் நிறைய பேசி இருக்கிறார். எல்லா நட்சத்திரங்களும் இணைந்து பணியாற்ற விரும்பும் வெகுசில இயக்குனர்களில் பிளஸ்சியும் ஒருவர்” என்று கூறியுள்ளார் ஸ்வேதா மேனன்.