அடுத்த ஐந்து மாதங்களுக்கு வரப் போகும் புதுப் படங்கள் அசத்துமா? | பாலியல் குற்றவாளிகளுக்கு இந்த மாதிரி தண்டனை வழங்க வேண்டும் : வரலட்சுமி | கமலின் 'விக்ரம்' பட வசூலை முறியடிக்குமா 'தக்லைப்'? | சூரி உடன் நடித்தது பெருமை : ஐஸ்வர்யா லட்சுமி | நினைத்து கூட பார்க்கவில்லை : அதிதி ஷங்கர் | ரெட்ரோ' வில் காட்சிகள் நீக்கம் : பாலிவுட் நடிகர் வருத்தம் | 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவான நவீன் சந்திரா | இரு மொழி படம் இயக்கும் விஜய் மில்டன் | நாளை படப்பிடிப்புகள் நடக்கும் : தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு | பிளாஷ்பேக்: பாடலுக்காக திரைக்கதையை மாற்றிய கே.எஸ்.ரவிகுமார் |
மலையாளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரித்விராஜ் நடிப்பில் ஆடு ஜீவிதம் திரைப்படம் வெளியானது. பிளஸ்சி இயக்கத்தில் உருவான இந்த படம் எழுத்தாளர் பென்யமின் எழுதிய ஆடுஜீவிதம் என்கிற நாவலைத் தழுவி படமாக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஆறேழு வருடங்கள் பட தயாரிப்பில் இருந்த இந்த படம் இந்த வருடம் வெளியானது. அரபு நாட்டில் ஆடு மேய்க்கச் சென்ற இளைஞன் ஒருவன் சந்திக்கும் பிரச்னைகள் மையப்படுத்தி உருவாகியிருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். அமலாபால் கதாநாயகியாக நடித்திருந்தார். படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றதுடன் 150 கோடி வரை வசூலித்தது.
சமீபத்தில் இந்த படத்தை பார்த்து ரசித்த பிரபல பாலிவுட் சீனியர் நடிகை ஜெயப்ரதா, ஆடுஜீவிதம் திரைப்படத்திற்கு நிச்சயமாக சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். மேலும் பிரித்விராஜின் நடிப்பு விவரிக்கவே முடியாத அளவிற்கு சிறப்பாக இருந்தது என்றும், பிளஸ்சி மீண்டும் தன்னை ஒரே வித்தியாசமான இயக்குனர் என நிரூபித்திருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.
இதற்கு முன்னதாக கடந்த 2011ல் இயக்குனர் பிளஸ்சி இயக்கிய பிரணயம் படத்தில் ஜெயப்ரதா மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.