கோலாகலமாய் நடந்த சித்தார்த் - அதிதி ராவ் திருமணம் | மீண்டும் 'மயோசிடிஸ்' பிரச்னை: சிகிச்சை பெறும் சமந்தா | தமிழ் சினிமாவில் எதுவும் நடக்கவில்லை, கமிட்டியும் தேவையில்லை: ஐஸ்வர்யா ராஜேஷ் | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழா: இந்தியா முழுவதும் நடக்கிறது | 'லவ் அண்ட் வார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு: 2 வருடங்களுக்கு பிறகு வெளிவருகிறது | சாரி: சேலையை மையமாக கொண்ட சைக்காலஜிக்கல் திரில்லர் படம் | இலங்கை தமிழர்கள் இணைந்து உருவாக்கிய 'ரத்தமாரே': ரஜினி வாழ்த்து | பிளாஷ்பேக்: 4 சகோதரர்கள் இணைந்து நடித்த படம் | நடன இயக்குனர் ஜானி மீது நடனப் பெண் புகார் | திருமண மோதிரம் 'மிஸ்ஸிங்' : மீண்டும் பிரிவு சர்ச்சையில் ஐஸ்வர்யா ராய் |
மலையாளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரித்விராஜ் நடிப்பில் ஆடு ஜீவிதம் திரைப்படம் வெளியானது. பிளஸ்சி இயக்கத்தில் உருவான இந்த படம் எழுத்தாளர் பென்யமின் எழுதிய ஆடுஜீவிதம் என்கிற நாவலைத் தழுவி படமாக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஆறேழு வருடங்கள் பட தயாரிப்பில் இருந்த இந்த படம் இந்த வருடம் வெளியானது. அரபு நாட்டில் ஆடு மேய்க்கச் சென்ற இளைஞன் ஒருவன் சந்திக்கும் பிரச்னைகள் மையப்படுத்தி உருவாகியிருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். அமலாபால் கதாநாயகியாக நடித்திருந்தார். படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றதுடன் 150 கோடி வரை வசூலித்தது.
சமீபத்தில் இந்த படத்தை பார்த்து ரசித்த பிரபல பாலிவுட் சீனியர் நடிகை ஜெயப்ரதா, ஆடுஜீவிதம் திரைப்படத்திற்கு நிச்சயமாக சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். மேலும் பிரித்விராஜின் நடிப்பு விவரிக்கவே முடியாத அளவிற்கு சிறப்பாக இருந்தது என்றும், பிளஸ்சி மீண்டும் தன்னை ஒரே வித்தியாசமான இயக்குனர் என நிரூபித்திருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.
இதற்கு முன்னதாக கடந்த 2011ல் இயக்குனர் பிளஸ்சி இயக்கிய பிரணயம் படத்தில் ஜெயப்ரதா மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.