ராயன் : தனுஷ் பாடிய ‛அடங்காத அசுரன்' பாடல் வெளியீடு | விஜயகாந்த்திற்கு பத்மபூஷண் விருது : மனைவி பிரேமலதா பெற்றார் | சல்மான்கானுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா | மேஜையை கண்டு பொறாமைப்பட்ட கமல் | பிறந்தநாளில் மதுரையில் பிரம்மாண்ட மாநாடு நடத்தும் விஜய்? | தெலுங்கில் ரீ-ரிலீஸ் ஆகும் விக்ரமின் அந்நியன் | மம்முட்டிக்கு கொடுக்கப்பட்ட எக்ஸ்ட்ரா பவர் | படம் வெளியாவதற்கு முன்பே மறைந்த சங்கீத் சிவன் | மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தில் சொல்லப்பட்டது உண்மையா? - விசாரிக்க தமிழக அரசு உத்தரவு | அந்த மூணு சர்ப்ரைஸை தயவு செய்து சொல்லாதீங்க : இளன் வேண்டுகோள் |
1990களில் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. சமீப காலமாக முழு நேர அரசியல்வாதியாக உருவெடுத்துள்ள அவர், ஆந்திர அரசின் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். தெலுங்கில் 2013ம் ஆண்டு டாட்டர் ஆப் வர்மா என்ற படத்தில் நடித்திருந்தவர், தமிழில் கடைசியாக 2015ல் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஆர்கே நாயகனாக நடித்த ‛என் வழி தனி வழி' என்ற படத்தில் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். அதன் பிறகு எந்த படங்களிலும் நடிக்கவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், மீண்டும் தனக்கு சினிமாவில் நடிக்க வேண்டுகின்ற ஆசை ஏற்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார். அதோடு மகேஷ்பாபு உடன் நடிக்க வேண்டும் என்று ஆசை தனக்கு நீண்ட காலமாக இருப்பதாகவும், அப்படி அவர் படத்தில் இருந்து நடிக்க வாய்ப்பு வந்தால் அக்கா- அண்ணி போன்ற ஏதாவது கேரக்டர்களில் நடிப்பேன். ஒருபோதும் அவருக்கு அம்மாவாக மட்டும் நடிக்க மாட்டேன் என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.