ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! | 48 வயதில் கன்றாவியான ரிலேஷன்ஷிப் : மீண்டும் ஒரு ஏமாற்றத்தில் புலம்பிய சுசித்ரா | ‛கோர்ட்' பட ரீமேக்கில் இணையும் அடுத்த பிரபலங்கள் | கதை நாயகன் அவதாரத்திற்கு தயாராகி வரும் பால சரவணன்! | நான் இந்திய சினிமாவின் ரசிகன்: ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் | ஐடி ஊழியர் கடத்தி, தாக்குதல் : நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு | 25 ஆண்டுகளுக்குபின் வடிவேலு, பிரபுதேவா கூட்டணி: முன்னே மாதிரி வொர்க் அவுட் ஆகுமா? | 'வீரவணக்கம்' பட புரமோஷனில் கலந்துகொள்ளாத சமுத்திரக்கனி | சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! |
தமிழில் எண்ணிலடங்கா வெற்றி படங்களை தந்து பின்னர் தேமுதிக எனும் அரசியல் கட்சியை துவங்கி அரசியலிலும் கால்பதித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் கேப்டன் என செல்லமாக அழைக்கப்படும் விஜயகாந்த். உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த விஜயகாந்த் கடந்தாண்டு டிசம்பரில் மறைந்தார். கலை மற்றும் அரசியல் பயணத்தில் இவரின் சாதனையை பெருமைப்படுத்தும் விதமாக மத்திய அரசு இவருக்கு பத்மபூஷண் வழங்குவதாக அறிவித்திருந்தது.
கடந்த மாதம் 22ம் தேதி நடந்த பத்ம விருதுகள் நிகழ்வில் விஜயகாந்துக்கு விருது வழங்கப்படவில்லை. இது சர்ச்சையானது. பின்னர் இரண்டாம் கட்ட நிகழ்வில் விஜயகாந்த்திற்கு விருது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இன்று(மே 9) டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இதில் மறைந்த நடிகர் விஜயகாந்த்திற்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது. அவர் சார்பில் அவரது மனைவி பிரேமலதா பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் மற்றும் மைத்துனர் சுதீஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
வைஜெயந்தி மாலா, சிரஞ்சீவிக்கு பத்மவிபூஷண்
இன்றைய நிகழ்வில் தமிழகத்தில் பிறந்து பாலிவுட் வரை சாதித்த பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலாவிற்கு(90) அவரின் கலை சேவையை பாராட்டி பத்ம விபூஷண் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
அதேப்போல் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் சிரஞ்சீவிக்கும் அவரது கலை சேவையை பாராட்டி பத்ம விபூஷண் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.