வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகரான சிரஞ்சீவி தற்போது, 'மன சங்கர வரபிரசாத் காரு' என்ற தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்திற்குப் பிறகு பாபி இயக்க உள்ள புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். 'வால்டர் வீரய்யா' படத்திற்குப் பிறகு பாபி - சிரஞ்சீவி கூட்டணி இணையப் போகும் படம் அது.
அப்படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தமிழ் நடிகரான கார்த்தி நடிக்க உள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. கார்த்திக்கு தெலுங்கிலும் குறிப்பிடத்தக்க ஒரு வரவேற்பு இருக்கிறது. தெலுங்கில் ஏற்கெனவே, நாகார்ஜுனாவுடன் இணைந்து 'ஊபிரி' படத்தில் நடித்திருந்தார். 'ஹிட் 3' படத்தின் முடிவில் வரும் கார்த்தி, 'ஹிட் 4' படத்திலும் நடிக்க உள்ளார்.
'வால்டர் வீரய்யா' படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து ரவி தேஜா நடித்திருந்தார். அது போல இயக்குனர் பாபி அடுத்த படத்திலும் சிரஞ்சீவியுடன் மற்றுமாரு ஹீரோவை நடிக்க வைக்க உள்ளார். அதுவும் அந்தப் படம் போலவே வெற்றியை பெற்றுத் தரும் என்ற சென்டிமென்ட்டையும் முன் வைக்கிறார்கள்.




