நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...? | மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் | பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு |

தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகரான சிரஞ்சீவி தற்போது, 'மன சங்கர வரபிரசாத் காரு' என்ற தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்திற்குப் பிறகு பாபி இயக்க உள்ள புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். 'வால்டர் வீரய்யா' படத்திற்குப் பிறகு பாபி - சிரஞ்சீவி கூட்டணி இணையப் போகும் படம் அது.
அப்படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தமிழ் நடிகரான கார்த்தி நடிக்க உள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. கார்த்திக்கு தெலுங்கிலும் குறிப்பிடத்தக்க ஒரு வரவேற்பு இருக்கிறது. தெலுங்கில் ஏற்கெனவே, நாகார்ஜுனாவுடன் இணைந்து 'ஊபிரி' படத்தில் நடித்திருந்தார். 'ஹிட் 3' படத்தின் முடிவில் வரும் கார்த்தி, 'ஹிட் 4' படத்திலும் நடிக்க உள்ளார்.
'வால்டர் வீரய்யா' படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து ரவி தேஜா நடித்திருந்தார். அது போல இயக்குனர் பாபி அடுத்த படத்திலும் சிரஞ்சீவியுடன் மற்றுமாரு ஹீரோவை நடிக்க வைக்க உள்ளார். அதுவும் அந்தப் படம் போலவே வெற்றியை பெற்றுத் தரும் என்ற சென்டிமென்ட்டையும் முன் வைக்கிறார்கள்.