மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா |

தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகரான சிரஞ்சீவி தற்போது, 'மன சங்கர வரபிரசாத் காரு' என்ற தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்திற்குப் பிறகு பாபி இயக்க உள்ள புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். 'வால்டர் வீரய்யா' படத்திற்குப் பிறகு பாபி - சிரஞ்சீவி கூட்டணி இணையப் போகும் படம் அது.
அப்படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தமிழ் நடிகரான கார்த்தி நடிக்க உள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. கார்த்திக்கு தெலுங்கிலும் குறிப்பிடத்தக்க ஒரு வரவேற்பு இருக்கிறது. தெலுங்கில் ஏற்கெனவே, நாகார்ஜுனாவுடன் இணைந்து 'ஊபிரி' படத்தில் நடித்திருந்தார். 'ஹிட் 3' படத்தின் முடிவில் வரும் கார்த்தி, 'ஹிட் 4' படத்திலும் நடிக்க உள்ளார்.
'வால்டர் வீரய்யா' படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து ரவி தேஜா நடித்திருந்தார். அது போல இயக்குனர் பாபி அடுத்த படத்திலும் சிரஞ்சீவியுடன் மற்றுமாரு ஹீரோவை நடிக்க வைக்க உள்ளார். அதுவும் அந்தப் படம் போலவே வெற்றியை பெற்றுத் தரும் என்ற சென்டிமென்ட்டையும் முன் வைக்கிறார்கள்.