தீவிர கதை விவாதத்தில் படையப்பா 2ம் பாகம் : ரஜினிகாந்த் புதிய தகவல் | ஜனநாயகன் : வியாபாரத்தில் நீடிக்கும் தடுமாற்றம் ? | அதிசயம், ஆனால், உண்மை… : 'படையப்பா' ரீரிலீஸுக்கு ரஜினிகாந்த் பேட்டி | கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் |

ஸ்லம் டாக் மில்லியனர் என்கிற படத்திற்காக சிறந்த சவுண்டு இன்ஜினியர் என்கிற பிரிவில் ஆஸ்கர் விருதை பெற்றவர் மலையாள திரை உலகை சேர்ந்த ரசூல் பூக்குட்டி. இதைத்தொடர்ந்து முன்னணி நடிகர்கள், இயக்குனர்களின் படங்களில் பணியாற்றி வரும் ரசூல் பூக்குட்டி கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'தி சவுண்ட் ஸ்டோரி' என்ற படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார்.
இந்த நிலையில் தற்போது இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ள ரசூல் பூக்குட்டி மலையாளத்தில் 'ஒட்ட' என்கிற படத்தை இயக்கி வந்தார்.. மேலும் இந்தப்படத்தை சில்ரன்ஸ் ரீயுனைடெட் எல்எல்பி என்கிற நிறுவனத்துடன் இணைந்து ரசூல் பூக்குட்டியே தயாரிக்கவும் செய்கிறார்.
இந்த படத்தில் சத்யராஜ், ரோகிணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க மலையாள திரை உலகை சேர்ந்த இளம் நடிகர்களான ஆசிப் அலி. இந்திரஜித் மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து வரும் அக்டோபர் 27ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.