தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் பற்றிய வதந்தி : மறுத்த தம்பி | தீபிகாவுக்கு ஆதரவாகப் பேசினாரா அஜய் தேவ்கன்? | அயோத்தியில் நான்காவது 'மனை' வாங்கிய அமிதாப்பச்சன் | தெலங்கானா மாநில சினிமா விருது வென்ற எஸ்ஜே சூர்யா, நிவேதா தாமஸ் | கமல் சாரை பற்றி தப்பா பேசாதீங்க! - சர்ச்சை குறித்து ஆவேசமாக பேசிய சிவராஜ்குமார் | கார்த்தியின் 'கைதி- 2' படப்பிடிப்பு: டிசம்பர் மாதத்தில் தொடங்குகிறது! | அபிஷன் ஜீவிந்த் மூலம் எனக்கு கிடைத்த புகழ்! - சசிகுமார் நெகிழ்ச்சி | சூர்யா 45வது படம் பண்டிகை நாளில் வெளியாகும்! - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தகவல் | பெங்களூரு காவல் நிலையத்தில் கமல்ஹாசன் மீது புகார்! வழக்கை பதிவு செய்யாத போலீசார் | 'பாஸ் என்கிற பாஸ்கரன் 2' வருமா? |
பிக்பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது. இதில் ராஜூ டைட்டில் வென்றார். பிரியங்காவும், பாவனியும் இரண்டாவது, 3வது இடத்துக்கு வந்தனர். பொதுவாக பிக்பாஸ் இறுதி போட்டிக்கு முன்னாள் டைட்டில் வின்னர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை இறுதி போட்டிக்கு முன்னாள் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜூனன் அழைக்கப்படவில்லை.
இதுகுறித்து அவர் தனது வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: பிக்பாஸ் சீசன் 5 கிராண்ட் பினாலேவில் கலந்து கொள்ள வேண்டும் என்று மிகவும் ஆசையுடனும், ஆர்வத்துடனும் இருந்தேன். கமல்ஹாசன் மற்றும் இதர போட்டியாளர்களை சந்திக்க வேண்டும் என்று ஆவலுடன் இருந்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக எனக்கு பிக்பாஸ் கிராண்ட் பினாலே நிகழ்ச்சிக்கு அழைப்பு வரவில்லை. என்கிறார்.
மேலும் இந்த சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரான இமான் அண்ணாச்சியும் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.