'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் நிறைவடைகிறது. 18 போட்டியாளர்களுடன் துவங்கிய பிக்பாஸ் சீசன் 5ஐ வழக்கம்போல் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். மேலும், இந்த நிகழ்ச்சியில் 2 போட்டியாளர்கள் வைல்டு கார்ட் என்ட்ரியாக வந்தனர். மற்ற சீசன்களை விட, இந்த சீசனில் பிக்பாஸ் வழங்கிய டாஸ்க்குளாலும், போட்டியாளர்களிடையே நடந்த சண்டைகளாலும் நிகழ்ச்சி சூடுபிடித்தது.
இறுதியில் ராஜூ, பிரியங்கா, பாவனி, அமீர், நிரூப் என 5 போட்டியாளர்கள் பைனலிஸ்டுகளாக உள்ளனர். பிக்பாஸ் இறுதிப்போட்டிக்கான ஷூட்டிங் நேற்று தொடங்கப்பட்டது. இந்நிலையில், பைனலில் பிக்பாஸ் சீசன்-5க்கான வெற்றியாளராக ராஜூ தேர்ந்தெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வெற்றிப் பரிசுடன் ராஜூ நிற்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
மேலும், 2வது இடத்தை பிரியங்கா, 3வது இடத்தை பாவனி, 4வது இடத்தை அமீர், 5வது இடத்தை நிரூப் ஆகியோர் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. பிக்பாஸ் சீசன்-5 பைனல் நிகழ்ச்சி விஜய் டிவியில் இன்று (ஜன.,16) மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.




