சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
தமிழை போலவே மலையாளத்திலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்று சென்று கொண்டிருக்கிறது. கடந்த ஆறு சீசன்களாக இந்த நிகழ்ச்சியை நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழில் கமல் எப்படியோ அதுபோல மலையாள பிக்பாஸின் முகமாகவே மோகன்லால் மாறிவிட்டார். அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் நூறாவது நாளை தொட்டு கடந்த ஞாயிறு அன்று அதன் பைனலும் நடைபெற்றது. இந்த ஆறாவது சீசனின் வெற்றியாளராக ஜின்டோ என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.
வெற்றியாளரை அறிவித்த பின்னர் மோகன்லால் பார்வையாளர்களிடம் பேசும்போது, “நீங்கள் ஏன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறீர்கள் என மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். நான் என்னுடைய படங்களில் விதவிதமான கதாபாத்திரங்களில் நடிப்பதன் மூலமாக உங்களை கவர்வதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மட்டும் தான் நான் மோகன்லாலாகவே உங்களை கவர்ந்து பொழுதுபோக்க செய்ய வேண்டிய சவால் இருக்கிறது. அதனாலேயே இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது எனக்கு பிடித்திருக்கிறது” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.