விஜபி-2 படத்தில் செலக்ட் ஆனேன் ஆனால்... வசந்த் வசியின் சோகக்கதை | நடனப்பள்ளி திறந்த ஹரிப்பிரியா | காலில் விழுந்த தந்தை : உணர்ச்சிமயமான சரிகமப நிகழ்ச்சி மேடை | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரியில் சாதித்த டி.ஆர்.மகாலிங்கம் | ஆஸ்கர் அகாடமியில் இந்தியர்களின் ஆதிக்கம் | பொய்யான வசூல் நிலவரம் வெளியிட்டால் நடவடிக்கை : மலையாள தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கை | நாயகன் ஆன கேட்க, பேச முடியாத இளைஞர் | பள்ளி பாடத்தில் தமன்னா வரலாறு இடம் பெற்றதால் சர்ச்சை | ரஜினிக்கு லுக் டெஸ்ட் ; ஜூலையில் கூலி படப்பிடிப்பு : லோகேஷ் அப்டேட் | ரேஸ் காரில் 222 கி.மீ வேகத்தில் சீறி பாய்ந்த அஜித் |
தமிழை போலவே மலையாளத்திலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்று சென்று கொண்டிருக்கிறது. கடந்த ஆறு சீசன்களாக இந்த நிகழ்ச்சியை நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழில் கமல் எப்படியோ அதுபோல மலையாள பிக்பாஸின் முகமாகவே மோகன்லால் மாறிவிட்டார். அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் நூறாவது நாளை தொட்டு கடந்த ஞாயிறு அன்று அதன் பைனலும் நடைபெற்றது. இந்த ஆறாவது சீசனின் வெற்றியாளராக ஜின்டோ என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.
வெற்றியாளரை அறிவித்த பின்னர் மோகன்லால் பார்வையாளர்களிடம் பேசும்போது, “நீங்கள் ஏன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறீர்கள் என மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். நான் என்னுடைய படங்களில் விதவிதமான கதாபாத்திரங்களில் நடிப்பதன் மூலமாக உங்களை கவர்வதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மட்டும் தான் நான் மோகன்லாலாகவே உங்களை கவர்ந்து பொழுதுபோக்க செய்ய வேண்டிய சவால் இருக்கிறது. அதனாலேயே இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது எனக்கு பிடித்திருக்கிறது” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.