'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்காக நடிகர்கள் பிரகாஷ்ராஜ், விஷ்ணுமஞ்சு, நடிகைகள் ஜீவிதா, ஹேமா ஆகியோர் தனித்தனி அணிகளாக களத்தில் இறங்கியிருந்தனர். இதையடுத்து பல அதிரடி நலத்திட்ட அறிவிப்புகளையும் அவர்கள் போட்டி போட்டு அறிவித்து வந்தனர்.
அதையடுத்து, விஷ்ணு மஞ்சு தலைமையிலான அணியினர் பிரகாஷ்ராஜை கன்னடர் என்று கொடி பிடித்தார்கள். ஆனபோதும் நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட பலர் பிரகாஷ்ராஜ்க்கு நேரடியாகவே ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது திடீர் டுவிஸ்டாக தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக கூறிவந்த நடிகைகள் ஜீவிதா, ஹேமா ஆகியோர் பிரகாஷ்ராஜின் அணியில் இணைந்து விட்டனர். இதனால் அவரது அணி பலம் பொருந்திய அணியாக உருவெடுத்துள்ளது. அதன்காரணமாக தெலுங்கு நடிகர் சங்க தேர்தல் பிரகாஷ்ராஜ்க்கும், விஷ்ணு மஞ்சுவிற்கும் இடையே நேரடியாக நடக்கப்போகிறது.
இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் தனது குழுவை தற்போது அறிவித்துள்ளார். அதில், நடிகர் ஸ்ரீகாந்த் நிர்வாக துணைத்தலைவராகவும், ஹேமா மற்றும் பேனர்ஜி துணைத்தலைவர்களாகவும், ஜீவிதா ராஜசேகர் பொதுச்செயலாளராகவும் தனது அணி சார்பில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.