Advertisement

சிறப்புச்செய்திகள்

லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ்

01 நவ, 2025 - 03:15 IST
எழுத்தின் அளவு:
Father-who-bought-leave-for-his-death-Anandaraj-breaks-down-on-stage
Advertisement

மதறாஸ் மாபியா கம்பெனி என்ற படத்தில் கதை நாயகனாக நடிக்கிறார் வில்லன் நடிகர் ஆனந்தராஜ். சென்னையில் நடந்த இந்த பட விழாவில் அவருடன் சென்னை திரைப்படக் கல்லுாரியில் படித்த இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆனந்தராஜை வாழ்த்தினர். கல்லுாரி காலங்களில் அவர் எப்படி இருப்பார் என்றும், தங்களின் முதல் படத்தில் அவரை நடிக்க வைத்த அனுபவம் குறித்து விரிவாக பேசினார்கள்.

ஆனந்த்ராஜ் பேசுகையில் ''நான் சினிமா பின்புலம் இல்லாமல் வந்தேன். நடிக்க வந்துவிட்டோம், எப்படி ஜெயிக்கப் போகிறோமோ என்று பயப்படுவேன். அந்த காலத்தில் சொந்த ஊருக்கு போகவே யோசிப்பேன். ஆர்.வி.உதயகுமார் தனது முதல் படத்தில் என்னை நடிக்க வைத்து கொடுமைப்படுத்தினார். கடும் காய்ச்சலில் இருந்தபோது பல மாடிகள் ஓட வைத்து படப்பிடிப்பு நடத்தினார். என் நண்பன் ஆர்.கே.செல்வமணியும் அப்படிதான். ஆனாலும், அப்படி கஷ்டப்பட்டு நடித்தது என்னை உறுதி ஆக்கியது.

ஒரு நாள் படப்பிடிப்பில் இருந்தபோது திடீரென 'உங்க போர்ஷன் முடிந்தது, வீட்டுக்கு போங்க என்றார்கள். அடுத்து 2 நாட்கள் படப்பிடிப்பு கிடையாது என்றார்கள். அப்போது என் அப்பா மறைந்த தகவல் வந்தது. நான் நடிப்பில் ஜெயிக்க உறுதுணையாக இருந்தவர் அப்பா. அவர் இறுதிசடங்கில் நான் கூடவே இருக்கணும். வேறு எந்த வேலையும் இருக்கக் கூடாது என நினைத்து, அவரே இப்படி லீவு வாங்கிக் கொடுத்து இருக்கிறார் என நினைத்தேன். நான் பல வலி, வேதனைகள், ஏமாற்றங்கள் தாங்கி இந்த இடத்துக்கு வந்துவிட்டேன். என் முதுகில் அவ்வளவு காயங்கள். கடந்த 40 ஆண்டுகளாக, 400 படங்களில் நடித்து இருக்கிறேன். என் அப்பாவை மறக்க முடியவில்லை' என்று மேடையிலே கண் கலங்கினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம்அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் ... இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் இந்தப்போக்கு மோசமானது : நிவேதா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in