டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

‛ஒரு நாள் கூத்து' படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். மதுரையில் பிறந்து துபாயில் வளர்ந்தவர். தமிழ், தெலுங்கில் மளமளவென படங்களில் நடித்து வந்தார். தற்போது சினிமாவை விட்டே ஒதுங்கி துபாயில் செட்டிலாகிவிட்டார். அதேசமயம் கார் ரேஸில் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் துபாய் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்வதாக அறிவித்தார். அவ்வப்போது வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வரும் இவர், இப்போது ஏஐ தொழில்நுட்பத்தின் ஆபத்தை பற்றி பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், ‛‛அபத்தமான ஏஐ வீடியோக்களை உண்மையானவையாக காட்டும் இந்தப்போக்கு மிகவும் மோசமானது. இப்போது அவை முற்றிலும் பிரித்தறிய முடியாததாக மாறும்போது அது எவ்வளவு மோசமாகிவிடும் என்று கற்பனை செய்து பாருங்கள்'' என குறிப்பிட்டுள்ளார்.