ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் இயக்குனர் ஹரியும் நடிகர் அருண் விஜய்யும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுவதற்கு இத்தனை காலம் ஆகியுள்ளது. அந்தவகையில் அருன் விஜய் - ஹரி கூட்டணியில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு தற்போது ராமேஸ்வரத்தில் நடைபெற்று வருகிறது. பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில் யோகிபாபு, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இந்தநிலையில் படப்பிடிப்பில் அருண் விஜய்க்கு கையில் அடிபட்டதால் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அருண் விஜய்யே தனது சோஷியல் மீடியா பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் ஐந்து நாட்களுக்கு எடை தூக்கும் பயிற்சியையும் மேற்கொள்ள போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் அருண் விஜய்.