விஜயகாந்த் நினைவிடத்தில் பாலா நெகிழ்ச்சி செயல்! | கணவருடன் பிறந்தநாள் கொண்டாடிய ப்ரியங்கா நல்காரி | இவ்வளவு வைரலாகும் என நினைக்கவேயில்லை : தர்ஷனா | டீச்சராக மாறி வகுப்பெடுக்கும் கேப்ரில்லா செல்லஸ் | திடீர் இயக்குனரான ஜோதி கிருஷ்ணா | ஒரு நொடி இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர் | 22 ஆண்டுகளுக்கு பிறகு படம் இயக்கிய கே.ரங்கராஜ் | கொளுத்தும் வெயிலில் காத்திருந்த சிறுவர்கள் ஏமாற்றம் : மன்னிப்பு கேட்ட பிரபுதேவா | சினிமா பற்றி சினிமா எடுத்தால் ஓடாதா? : கவின் ஆதங்கம் | சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் |
நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் இயக்குனர் ஹரியும் நடிகர் அருண் விஜய்யும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுவதற்கு இத்தனை காலம் ஆகியுள்ளது. அந்தவகையில் அருன் விஜய் - ஹரி கூட்டணியில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு தற்போது ராமேஸ்வரத்தில் நடைபெற்று வருகிறது. பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில் யோகிபாபு, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இந்தநிலையில் படப்பிடிப்பில் அருண் விஜய்க்கு கையில் அடிபட்டதால் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அருண் விஜய்யே தனது சோஷியல் மீடியா பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் ஐந்து நாட்களுக்கு எடை தூக்கும் பயிற்சியையும் மேற்கொள்ள போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் அருண் விஜய்.