கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
வாரிசு என்ற அடையாளத்துடன் அறிமுகமானாலும் கடும் போராட்டங்களுக்கு பின்னர் முன்னணி நடிகராக வளர்ந்திருப்பவர் அருண் விஜய். அவர் தற்போது ஹரி இயக்கத்தில் 'யானை' படத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன் அதிரடியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
முதல்முறையாக ஹரியுடன் அருண் விஜய் கூட்டணி அமைத்துள்ளதால் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதுதவிர இவரின் நடிப்பில் உருவாகியுள்ள அக்னி சிறகுகள், பார்டர், சினம் உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. யானை படப்பிடிப்பில் பணியாளர்களுக்கு சமைத்துக் கொடுத்ததை நெகிழ்வுடன் அருண் விஜய் பகிர்ந்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் "நேற்று இரவு படப்பிடிப்பின் போது என் குழுவினருக்கு சமைப்பது மகிழ்வாக இருந்தது... எனக்கு இடம் கொடுத்த அன்பான குடும்பத்திற்கு நன்றி... அவர்கள் தங்கள் அன்பில் மிகவும் பணக்காரர்களாகவும், பெருந்தன்மையுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்... நாம் யார், நாம் என்ன என்பது முக்கியமல்ல. நாம் என்ன செய்கிறோம் என்பது தான் முக்கியம். நாம் ஒருவருக்கு ஒருவர் பரப்பும் கருணையும் அன்பும் தான்... அன்பைப் பரப்புங்கள்... இந்த அன்பான உள்ளங்கள் அனைத்தையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக.." என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் அஜித் தான் தன் படங்களின் படப்பிடிப்பில் பணியாளர்களுக்கு பிரியாணி சமைத்து கொடுப்பார். அந்த வழியை அருண் விஜய்யும் பின்பற்ற தொடங்கி இருக்கிறார்.