முதல்வராக பொறுப்பேற்ற விஜய்; விழாவில் பங்கேற்ற திரைப்பிரபலங்கள் | ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா | தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு | பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி | கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் மீண்டும் இணையும் 'லகான்' கூட்டணி | அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா? | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம் இந்த சூழ்நிலையில் நடக்குமா? | திருப்பதி கோயிலில் சமுத்திரக்கனி வழிபாடு : விஜய்க்கு வாழ்த்து | திருமாவளவனை மறைமுகமாக விமர்சித்த நடிகை சனம் ஷெட்டி | பிரேமலு காமெடி நடிகருடன் மமிதா பைஜு ஜோடியாக நடிக்கும் புதிய படம் துவக்கம் |

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்தாலும் பல இசையமைப்பாளர்களும் அவருக்கு ரசிகர்களாகவே இருக்கிறார்கள். இளையராஜாவின் இசையின் பெருமையைப் பற்றி உணர்ந்தவர்கள் அவர்களும் தானே. அப்படி இளையராஜாவின் ரசிகராக அவருடைய இசைக் கூடத்தின் முன்பு 'பாகுபலி, ஆர்ஆர்ஆர்' படங்களின் இசையமைப்பாளரான கீரவானி என்கிற மரகதமணி ஒரு செல்பி புகைப்படத்தை எடுத்துள்ளார். அதோடு அவரையும் சந்தித்து பேசி உள்ளார்.
இதுப்பற்றி கீராவானி டுவிட்டரில் பதிவிட்டு, “காம்தா நகரை கடந்து போகும் போது, இந்த பில்டிங் முன்னால் எடுத்துக் கொண்ட செல்பி மூலம் இன்றைய நாள் சிறப்பான நாள்” எனப் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு டுவீட்டில் இளையராஜாவை சந்தித்த போட்டோவை பகிர்ந்து, ‛‛செல்பி கிப்ட் கிடைத்த சில நிமிடங்களில் இளையராஜாவை சந்தித்தது சிறப்பான நாளாக அமைந்தது'' என பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் பாலசந்தர் தான் இயக்கிய, மம்முட்டி, பானுப்ரியா நடித்த 'அழகன்' படத்தின் மூலம் மரகதமணியை தமிழில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து நீ பாதி நான் பாதி, பாட்டொன்று கேட்டேன், சிவந்த மலர், சேவகன், ஜாதி மல்லி, பிரதாப், ஹீரோ, கொண்டாட்டம், நான் ஈ” ஆகிய படங்களுக்கு மரகதமணி என்ற பெயரில் இசையமைத்துள்ளார் கீரவானி.