பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்தாலும் பல இசையமைப்பாளர்களும் அவருக்கு ரசிகர்களாகவே இருக்கிறார்கள். இளையராஜாவின் இசையின் பெருமையைப் பற்றி உணர்ந்தவர்கள் அவர்களும் தானே. அப்படி இளையராஜாவின் ரசிகராக அவருடைய இசைக் கூடத்தின் முன்பு 'பாகுபலி, ஆர்ஆர்ஆர்' படங்களின் இசையமைப்பாளரான கீரவானி என்கிற மரகதமணி ஒரு செல்பி புகைப்படத்தை எடுத்துள்ளார். அதோடு அவரையும் சந்தித்து பேசி உள்ளார்.
இதுப்பற்றி கீராவானி டுவிட்டரில் பதிவிட்டு, “காம்தா நகரை கடந்து போகும் போது, இந்த பில்டிங் முன்னால் எடுத்துக் கொண்ட செல்பி மூலம் இன்றைய நாள் சிறப்பான நாள்” எனப் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு டுவீட்டில் இளையராஜாவை சந்தித்த போட்டோவை பகிர்ந்து, ‛‛செல்பி கிப்ட் கிடைத்த சில நிமிடங்களில் இளையராஜாவை சந்தித்தது சிறப்பான நாளாக அமைந்தது'' என பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் பாலசந்தர் தான் இயக்கிய, மம்முட்டி, பானுப்ரியா நடித்த 'அழகன்' படத்தின் மூலம் மரகதமணியை தமிழில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து நீ பாதி நான் பாதி, பாட்டொன்று கேட்டேன், சிவந்த மலர், சேவகன், ஜாதி மல்லி, பிரதாப், ஹீரோ, கொண்டாட்டம், நான் ஈ” ஆகிய படங்களுக்கு மரகதமணி என்ற பெயரில் இசையமைத்துள்ளார் கீரவானி.