சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி |
தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெளிவந்த படங்களில் அரசியல் மற்றும் சாதிய ரீதியிலான படமாக அமைந்த படம் 'கர்ணன்'. மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரஜிஷா விஜயன், லால் மற்றும் பலர் நடித்த படம்.
அப்படம், அதிமுக ஆட்சிக் காலத்தில் 1995ல் நடந்த கொடியங்குளம் கலவரத்தை கதைக்களமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம். ஆனால், படத்தில் திமுக ஆட்சிக் காலமான ‛1990' களின் பிற்பகுதியில் நடந்ததாக குறிப்பிட்டிருந்தார்கள்.
தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு முன்பாக அந்தப் படம் வெளிவந்த போது, நடிகரும், தயாரிப்பாளரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவரது டுவிட்டரில் அந்தத் தவறு குறித்து “1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997ல் கழக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம் என உறுதியளித்தனர்,” எனப் பதிவிட்டிருந்தார்.
அதன்பின் படக்குழுவினர் “90களின் இறுதியில்” என்று மாற்றினர். அதற்கும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தது. அதை உதயநிதியும் மீண்டும் சுட்டிக்காட்டினார். ஒடுக்கப்பட்ட மக்களின் மேன்மைக்காக கருணாநிதி செய்த பங்களிப்புகள் காலத்தில் அழியாதவை. அதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. எனவே, இந்த விஷயத்தை இத்துடன் விடுத்து ஆக்கபூர்வமான பணிகளில் கவனம் செலுத்துவோம், எனக் குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், “90களின் இறுதியில்” என்பது அடுத்து “அடிப்படை தேவைகளுக்காகவும், மனித உரிமைகளுக்காகவும், சாமானிய மக்கள் உயிர்ப்போடு போராடத் தொடங்கிய கால காட்டம், சாட்சியாக, பட்டாம்பூச்சி,” என்று மாற்றினார். இந்த வரிகள் தான் இப்போதும் ஓடிடியில் உள்ள கர்ணன் படத்திலும் இடம் பெற்றுள்ளது. அப்போதும் கூட படக்குழு “95ம் ஆண்டு” என்ற சரியான வருடத்தை குறிப்பிடவில்லை.
அந்த 'கர்ணன்' பட விவகாரத்தை திமுகவினர் இன்னும் மறக்கவில்லை. உதயநிதி தவறை சுட்டிக்காட்டியும், கலவரம் நடந்த அந்த ஒரு குறிப்பிட்ட ஆண்டை சரியாகத் திருத்தாத, 'கர்ணன்' இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ளார் என்ற செய்திகள் திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது 'சார்பட்டா பரம்பரை' படத்தை இயக்குனர் பா.ரஞ்சித், திமுகவை பெருமைப்படுத்தும் விதத்தில் எடுத்துள்ளதால் இரண்டு படங்களையும் ஒப்பிட்டுப் பேசி வருகிறார்கள்.