பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
பொதுவாக இளையராஜா பிற இசை அமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்ப மாட்டார். அபூர்வமாக இது நடந்திருக்கிறது. 1986ம் ஆண்டு வெளிவந்த 'மெல்ல திறந்தது கதவு' என்ற படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இணைந்து இசை அமைத்திருந்தார். மோகன், அமலா, ராதா நடித்த இந்த படத்தை ஆர்.சுந்தர்ராஜன் இயக்கி இருந்தார். படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானது.
இந்த படத்திற்கு முன்னதாக அதாவது 1985ம் ஆண்டு ராமராஜன் இயக்கத்தில் உருவான 'ஹலோ யார் பேசுறது' என்ற படத்திற்கு கங்கை அமரனுடன் இணைந்து இசை அமைத்தார் இளையராஜா. ஆனால் இந்த படத்தின் பாடல்கள் பெரிதாக பேசப்படவில்லை. இந்த படத்தில் சுரேஷ், ஜீவிதா, கவுண்டமணி, செந்தில் நடித்திருந்தார்கள்.