ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
சில ஆண்டுகளுக்கு முன் பாடலாசிரியர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு கூறியிருந்தார். இது நாள் வரை அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தொடர்ந்து சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் பதிவிட்டு வருகிறார் சின்மயி. இந்நிலையில் மலையாளத்தில் ஞானபீட விருது பெற்ற கவிஞர் ஓஎன்வி குறுப்புவின் பெயரில் வழங்கப்படும் இலக்கியத்திற்கான விருது இந்தாண்டு இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு நடிகை பார்வதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டுவிட்டரில் அவர் கூறுகையில், ஓ.என்.வி. ஐயா எங்களின் பெருமை. அவரின் பங்களிப்பு ஒப்பிட முடியாதது. இப்படிப்பட்ட கவுரவமான விருதை பாலியல் புகாரில் சிக்கிய ஒருவருக்கு வழங்குவது அவமரியாதையாகும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இன்ஸ்டாவில், ‛‛பதினேழுக்கும் அதிகமான புகார்கள் அவர் மீது வந்துள்ளன. இதில் பல புகார்கள் தவறானவையாக கூட இருக்கலாம். ஆனால் இங்கே அதிகாரத்தில் இருக்கும் ஒருவருடைய நற்பெயர் தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறதே தவிர, அவரது மனித நேயம் அல்ல,,, கலை பெரிதா, கலைஞன் பெரிதா என என்னுடன் விவாதிக்க முற்பட்டால், மனிதநேயத்துடன் கூடிய ஒருவன் உருவாக்கும் கலை தான் சிறந்தது என்பேன். அடூர் கோபாலகிருஷ்ணனோ அல்லது விருதுக்குழு நடுவரோ யார் தீர்மானித்தது, குற்றச்சாட்டுக்கு ஆளான வைரமுத்துவுக்கு இந்த பெருமையை வழங்குவதற்கு..?” என விமர்சனத்துடன் கூடிய கேள்வியையும் எழுப்பியுள்ளார் பார்வதி.