அனந்தா திரை படைப்பல்ல... இறை படைப்பு : பா.விஜய் நெகிழ்ச்சி | பாலிவுட் தயாரிப்பாளர்களுடன் இணைந்த கார்த்திக் சுப்பராஜ் | என் குறைகளை திருத்திக் கொள்கிறேன் : டிடிஎப் வாசன் | கடந்த வாரம் ரிலீசான படங்களின் வரவேற்பு எப்படி? | எனக்கும் கடன் இருக்கு : விஜய்சேதுபதி தகவல் | அமலாக்கத்துறைக்கு வந்த ஸ்ரீகாந்த்: 10 மணி நேரம் விசாரணை | 70 கோடி வசூலித்த 'பைசன்' | பிளாஷ்பேக் : 18 வயதில் இயக்குனரான சுந்தர் கே.விஜயன் | பிளாஷ்பேக் : 22 மொழிகளில் சப் டைட்டில் போடப்பட்ட முதல் தமிழ் படம் | 150 ரூபாய் இல்லாமல் கஷ்டப்பட்டேன்: இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் |

இயக்குனரான சமுத்திரகனி நடிகராகி கதைநாயகன் வில்லன், குணச்சித்ர வேடங்களில் நடித்து வருகிறார். முதன்முறையாக 'ராகு கேது' என்ற புராணப்படத்தில் சிவனாக நடிக்கிறார். துர்க்கையாக கஸ்தூரி நடிக்கிறார். விக்னேஷ் மகாவிஷ்ணுவாகவும் நடிக்கிறார். மோகன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு பரணிதரன் இசையமைக்கிறார்.
தமிழரசன் தியேட்டர் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை துரை.பாலசுந்தரம் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது, ''ஏ.பி.நாகராஜனுக்கு பிறகு தமிழில் யாரும் பக்தி-புராண படங்களை எடுப்பதே கிடையாது. அந்தவகையில் 35 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ஒரு நேரடி புராண படமாக 'ராகு கேது' படத்தை இயக்கியுள்ளோம்.
படத்துக்கு 'யு' தணிக்கை சான்றிதழ் பெற்றுள்ளோம். ராகு, கேது உருவான வரலாறு, அவர்கள் மனித வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவை அற்புதமான தமிழில் சொல்லப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் படத்தை திரைக்கு கொண்டு வருவோம்'', என்றார்.