ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
பெரிய நட்சத்திரங்களுடன் பிரம்மாண்டமாக தயாரிக்கப்படும் படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். ஆனாலும் அந்த படம் பெரிய தோல்வியை சந்திக்கும். சமீபத்திய படங்களில் தக் லைப், இந்தியன் 2, கேம் சேஞ்ஜர் ஆகிய படங்களை குறிப்பிடலாம். ஆனால் அந்த காலத்தில் இதுபோன்ற தோல்விகள் அபூர்வமாகவே அமையும். அப்படி அமைந்த படங்களில் முக்கியமானது 'மாயமாலை'.
தெலுங்கில் 'திலோத்தமா' என்ற பெயரில் உருவான இந்த படம் தமிழில் 'மாயமாலை' என்ற பெயரில் வெளியானது. இரண்டு மொழிகளுக்கும் தனித்தனியாக படமாக்கப்பட்ட இந்த படத்தில் முக்கிய நடிகர்கள் தவிர மற்றவர்கள் அந்தந்த மொழி நடிகர்கள் நடித்தார்கள். சோபனாச்சலா பிக்சர்ஸ் பேனரின் கீழ் மிர்சாபூரைச் சேர்ந்த ராஜா சாஹேப் தயாரித்து இயக்கினார்.
இதில் அக்கினேனி நாகேஸ்வர ராவ் மற்றும் அஞ்சலி தேவி ஆகியோர் நாயகன், நாயகியாக நடித்தனர். இசையமைத்தவர் பி. ஆதிநாராயண ராவ். தமிழ் வசனங்கள் மற்றும் பாடல்களை பாபநாசம் சிவன் எழுதினார். இந்திரன் சபை நடன கலைஞரான திலோத்தமை பூமியில் உள்ள மானுடன் ஒருவனை காதலிக்கிற கதை. திலோத்தமயாக அஞ்சலிதேவி நடித்தார். பூலோக வாலிபனாக நாகேஸ்வரரா நடித்தார்.