பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் | மீண்டும் ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா | விடியலாக முழு வீடியோ வரும் : திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி பார்த்திபன் சஸ்பென்ஸ் | என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் |

பெரிய நட்சத்திரங்களுடன் பிரம்மாண்டமாக தயாரிக்கப்படும் படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். ஆனாலும் அந்த படம் பெரிய தோல்வியை சந்திக்கும். சமீபத்திய படங்களில் தக் லைப், இந்தியன் 2, கேம் சேஞ்ஜர் ஆகிய படங்களை குறிப்பிடலாம். ஆனால் அந்த காலத்தில் இதுபோன்ற தோல்விகள் அபூர்வமாகவே அமையும். அப்படி அமைந்த படங்களில் முக்கியமானது 'மாயமாலை'.
தெலுங்கில் 'திலோத்தமா' என்ற பெயரில் உருவான இந்த படம் தமிழில் 'மாயமாலை' என்ற பெயரில் வெளியானது. இரண்டு மொழிகளுக்கும் தனித்தனியாக படமாக்கப்பட்ட இந்த படத்தில் முக்கிய நடிகர்கள் தவிர மற்றவர்கள் அந்தந்த மொழி நடிகர்கள் நடித்தார்கள். சோபனாச்சலா பிக்சர்ஸ் பேனரின் கீழ் மிர்சாபூரைச் சேர்ந்த ராஜா சாஹேப் தயாரித்து இயக்கினார்.
இதில் அக்கினேனி நாகேஸ்வர ராவ் மற்றும் அஞ்சலி தேவி ஆகியோர் நாயகன், நாயகியாக நடித்தனர். இசையமைத்தவர் பி. ஆதிநாராயண ராவ். தமிழ் வசனங்கள் மற்றும் பாடல்களை பாபநாசம் சிவன் எழுதினார். இந்திரன் சபை நடன கலைஞரான திலோத்தமை பூமியில் உள்ள மானுடன் ஒருவனை காதலிக்கிற கதை. திலோத்தமயாக அஞ்சலிதேவி நடித்தார். பூலோக வாலிபனாக நாகேஸ்வரரா நடித்தார்.