வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் |

பெரிய நட்சத்திரங்களுடன் பிரம்மாண்டமாக தயாரிக்கப்படும் படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். ஆனாலும் அந்த படம் பெரிய தோல்வியை சந்திக்கும். சமீபத்திய படங்களில் தக் லைப், இந்தியன் 2, கேம் சேஞ்ஜர் ஆகிய படங்களை குறிப்பிடலாம். ஆனால் அந்த காலத்தில் இதுபோன்ற தோல்விகள் அபூர்வமாகவே அமையும். அப்படி அமைந்த படங்களில் முக்கியமானது 'மாயமாலை'.
தெலுங்கில் 'திலோத்தமா' என்ற பெயரில் உருவான இந்த படம் தமிழில் 'மாயமாலை' என்ற பெயரில் வெளியானது. இரண்டு மொழிகளுக்கும் தனித்தனியாக படமாக்கப்பட்ட இந்த படத்தில் முக்கிய நடிகர்கள் தவிர மற்றவர்கள் அந்தந்த மொழி நடிகர்கள் நடித்தார்கள். சோபனாச்சலா பிக்சர்ஸ் பேனரின் கீழ் மிர்சாபூரைச் சேர்ந்த ராஜா சாஹேப் தயாரித்து இயக்கினார்.
இதில் அக்கினேனி நாகேஸ்வர ராவ் மற்றும் அஞ்சலி தேவி ஆகியோர் நாயகன், நாயகியாக நடித்தனர். இசையமைத்தவர் பி. ஆதிநாராயண ராவ். தமிழ் வசனங்கள் மற்றும் பாடல்களை பாபநாசம் சிவன் எழுதினார். இந்திரன் சபை நடன கலைஞரான திலோத்தமை பூமியில் உள்ள மானுடன் ஒருவனை காதலிக்கிற கதை. திலோத்தமயாக அஞ்சலிதேவி நடித்தார். பூலோக வாலிபனாக நாகேஸ்வரரா நடித்தார்.