சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா | பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி | நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் | ‛நூறு சாமி' படக் கதை குறித்து பகிர்ந்த சசி | முத்து என்கிற காட்டானுக்கு பின்னால் நடந்ததையும் வெப் தொடராக எடுக்கலாம் : விஜய் சேதுபதி | ஓடிடியில் வரவேற்பைப் பெற்ற 'மேட் இன் கொரியா' | துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு |

திரைக்கதை எழுத்தாளர் மற்றும் வசனகர்த்தா விந்தன். சிவாஜியின் நெருங்கிய நண்பரான அவருக்கு அவரை வைத்து ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்பது கனவாக இருந்தது. இதற்காக 'மல்லிகா புரொடக்ஷன்ஸ்' என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்,
சிவாஜி, பத்மினி முக்கிய கேரக்டரில் நடிக்க 'பதிவிரதா' என்ற படத்தை அறிவித்தார். சிவாஜி, பத்மினி ஆகியோரை நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்து, அந்த வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டார். இந்நிறுவனத்தில் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனும், தொழிலதிபர் சிங்கப்பூர் ராமசாமியும் பங்குதாரர்களாக இணைந்தனர்.
சிவாஜியும், பத்மினியும் காதலிப்பதாக பரவலான செய்திகள் வந்த அந்த நேரத்தில் சிவாஜியும், பத்மினியும் தனிப்பட்ட முறை பயணமாக அமெரிக்கா சென்று விட்டார்கள். இதனால் பதிவிரதா தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் படத்தில் பங்குதாரர்களாக சேர்ந்தவர்கள் விலகிக் கொண்டனர். இதனால் படமும் நின்று போனது.
'பதிவிரதா' படத்திற்காக விந்தன் இயற்றி, கே.வி.மகாதேவன் இசையமைப்பில் இரண்டு திரைப் பாடல்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டன. பின்னர் அந்த பாடல்களை வேறு படங்களில் பயன்படுத்தினார் கே.வி.மகாதேவன்.