மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

திரைக்கதை எழுத்தாளர் மற்றும் வசனகர்த்தா விந்தன். சிவாஜியின் நெருங்கிய நண்பரான அவருக்கு அவரை வைத்து ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்பது கனவாக இருந்தது. இதற்காக 'மல்லிகா புரொடக்ஷன்ஸ்' என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்,
சிவாஜி, பத்மினி முக்கிய கேரக்டரில் நடிக்க 'பதிவிரதா' என்ற படத்தை அறிவித்தார். சிவாஜி, பத்மினி ஆகியோரை நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்து, அந்த வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டார். இந்நிறுவனத்தில் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனும், தொழிலதிபர் சிங்கப்பூர் ராமசாமியும் பங்குதாரர்களாக இணைந்தனர்.
சிவாஜியும், பத்மினியும் காதலிப்பதாக பரவலான செய்திகள் வந்த அந்த நேரத்தில் சிவாஜியும், பத்மினியும் தனிப்பட்ட முறை பயணமாக அமெரிக்கா சென்று விட்டார்கள். இதனால் பதிவிரதா தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் படத்தில் பங்குதாரர்களாக சேர்ந்தவர்கள் விலகிக் கொண்டனர். இதனால் படமும் நின்று போனது.
'பதிவிரதா' படத்திற்காக விந்தன் இயற்றி, கே.வி.மகாதேவன் இசையமைப்பில் இரண்டு திரைப் பாடல்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டன. பின்னர் அந்த பாடல்களை வேறு படங்களில் பயன்படுத்தினார் கே.வி.மகாதேவன்.